மலரின் சிநேகிதி நீ

மலரிதழ் விரிக்காமல்
மௌன மொட்டாக நிற்பதேனோ ?
மலர்தழுவும் தென்றல் வீசாமல்
ஒதுங்கிச் செல்வதேனோ ?
மலரத்தேனை அருந்தவரும்
வண்டினமும் வரவில்லை ஏனோ ?
மலரின் சிநேகிதி நீ இன்று
வருகை புரியவில்லை அதனாலோ !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-24, 6:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 124

மேலே