தண்ணீர் பாடல் ...!

கல்லும் மழையும் பாடி வந்தேன்
காடும் செடியும் வளர்த்து வந்தேன்
எல்லையில்லா திசைகளிலும்
நான் இருந்து கிடந்தும் ஓடிவந்தேன்
தாகமென தவிப்போருக்கு நல்
தாகம் தீர்த்து உயிர்காத்து வந்தேன்
மேடு பள்ளம் போய் வந்தேன் பல
ஏரி குளம் எல்லாம் நிரப்பி வந்தேன்
ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்

எழுதியவர் : hishalee (21-Nov-11, 11:11 am)
பார்வை : 288

மேலே