கண்மணி நீ வர காலமெல்லாம் 555
பெண்ணே....
அன்று எனக்கு முன்னே நீ
நடைபோட்டாய் ....
உன் பின்னே நடைபோட்ட
என்னை பார்த்து ....
என் பின்னால் என் வருகிறாய்
என்றாய்.....
எனக்கு முன் நீ செல்வதால்
நான் உன் பின்னால் வருவதாக
நினைக்கிறாய்.......
நிமிடம் நின்று செல்....
உனக்கு முன் நான்
செல்வேன் என்றேன்......
என் பின்னே நீ வருவாய் என்றேன் .....
இன்று நம் பின்னால் .....
உன் பின்னால் உன் கணவனும் .....
என் பின்னால் என் மனைவியும் .......
யார் பின்னால் யார்????