ஈழத் தோழன்!

எங்கிருந்தாய் என்றேன்?
'இருட்டில்' என்றான்...

என்ன உண்டாய் என்றேன்?
'கிடைத்ததெல்லாம்' என்றான்...

எப்படி இருக்கிறாய் என்றேன்?
'ஏதோ' என்றான்...

எங்கு வந்தாய் என்றேன்?
"எங்கிருந்தாய்?
என்ன உண்டாய்?
எப்படி இருக்கிறாய்?
என்றென்னை
எதுவும் கேட்க மாட்டாள்
என்றெண்ணியிருந்தேன்...
அத்தனையையும் நீ கேட்டு விட்டாய்!!!
கண்டு கொண்டுவிட்டேன்
தாய்வீடு இதுவல்லவென்று...
ஈழம் திரும்புகிறேன்" என்றான்...

என்னிடம் எதாவது கேட்கணுமோ என்றேன்?
"உனக்கு நடந்தவை எதுவுமே தெரிந்திருக்கவில்லையே!
இருட்டுக்கு சாயம் அடிப்பதெப்படி என்று வியத்திருக்காதே...
சொல்வது சூரியனாக இருந்தால்! நடப்பது கவனி இனி!"
என்று சொல்லிச் சென்றான் அந்த ஈழத் தமிழன்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (18-Dec-11, 6:59 pm)
பார்வை : 263

மேலே