மழையே! நான் உன்னை நேசிக்கிறேன்!!

மழைச் சாரல்,
ஐப்பசி, கார்த்திகை,
இனிய மாலைப் பொழுது,
நம் முகத்தில் பட்டுத் தெறிக்கும்
தூய வெள்ளி மழைத் துளிகள்,
நமக்குத் தரும் அன்பு முத்தங்களோ!

பாதையோரத்தில் தேங்கும் நீர்க் குட்டைகள்,
சாலைகளை ஆக்கிரமித்து ஓடும் வெள்ளம்,
இரவில் வீட்டின் சாரளத்தில் எழும் இனிய ஓசை,
அனைத்தும் மழை நமக்கு அருளும் பரவசம்,
அது ஒரு இனிய தாலாட்டு - ஆதலின்
மழையே! நான் உன்னை நேசிக்கிறேன்!!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-11, 3:05 pm)
பார்வை : 338

மேலே