கலைமகள்
உன் நாவினில் மலருதம்மா ஆயிரம் கவிதைகள்
உன் வீணையில் உள்ளதம்மா ஆயிரம் கலைகள்
ஏழிசையும் உன் குரலாம் நவரசங்களும்
உன் கை வண்ணம் கலைக்கோர் கலைமகள் நீ
எங்கள் கல்விக்கு நீ அன்னை
அந்த கல்வியை விட வேறு செல்வம்தான்
உலகில் என்ன உன் அன்பில் வளரும் இளம்
பிள்ளை செல்வங்கள் நாங்கள்