கேள்விகள்.......?

அம்மா!......?
ஏனம்மா அழுகிறாய்?
பாறை சுமக்க தானே செல்கிறேன்..,
பள்ளிக்கூடம் அல்லவே!...,

வயிற்றுக்கு ஈர துணிய கட்ட சொல்கிறாய்?
எப்பொழுதம்மா புத்தக மூட்டை சுமப்பேன்?

ஆனா, ஆவன்னா கற்கும் முன்பே -ஏனம்மா
பஞ்சு கற்றோடோ பழக வைத்தாய்?

தீப்பெட்டி தொழிற்சாலை கூலியோடு
இருதய நோயும் இலவசமாம்!

இதற்காகவா அம்மா என்னை எட்டு
மாதத்திலேயே- ஈன்றுஎடுத்தாய்.....?

எழுதியவர் : pommu (31-Dec-11, 2:13 pm)
பார்வை : 273

மேலே