ஜாலியான ஜானவாசம்!

உயர் தர ஹோட்டலில்
தங்கி இருந்த நான்,
தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஒரே பட படப்பு.
ஏசி அறையிலும் வியர்வை,
விரட்டி விரட்டி அடிக்கிறது.

முதன் முறை திருமணம்
என்பதால், ஏக நடுக்கம்.
சிறுநீர் கூட என்னைச்
சின்னாபின்னம் செய்தது.

துண்டும் கையுமாக அறையை
சுத்தி சுத்தி வருகிறேன்.
எதைத் தேடுகிறேன் என்று தெரியாமல்.

சவரம் செய்ய நினைத்து,
கையில் ரேசர் கொண்டு,
மழுங்க வழிக்கப் பார்த்தேன்.
திடீர் என்று ஒரு குழப்பம்,
மேல் இருந்து கீழ் செறைப்பதா?
இல்லை கீழ் இருந்து மேல் செறைப்பதா? என்று.
பிறகு தான் நினைவுக்கு வந்தது,
காலையில் சலூன் சென்று வந்தது.

முகம் கழுவி, வெளியே வந்து,
ஒரு புது துணி அணிந்து,
கண்ணாடி முன் நின்றால்!
ஏதோ தவறாய் பட்டது.
ஆம் அணிந்த சட்டை, ஜாக்கெட் பிட்டு போல்
சிக்கென இருந்தது.
அணிதிருந்தது என் கடைசி தம்பியின்
சட்டையை!!

சரி செய்த பிறகு.
தலை வாரி,
டக் இன் செய்து,
பெல்ட் கட்டி,
திரும்ப கண்ணாடி கண்டால் -
பின்புறம் பேண்டின் பல லூப்கள்
பல்லை காட்டிக் கொண்டிருந்தது.
ஆம் பெல்ட் அனைத்து லூப்பையும்
அனுசரிக்கவில்லை என்பதால்.
அதையும் சரி செய்து.

வாசனை திரவம் தேடி,
அக்குலில் அடித்தால்,
வாசம் வரவே இல்லை.
உஷ் என்று சத்தம் மட்டுமே கேட்கலாயிற்று.
உள்ளங்கையில் அடித்தேன்.
சென்ட் வெள்ளையாய் பொங்கி வந்தது.
ஐயய்யோ!!! புரிந்து விட்டது.
அடித்தது ஷேவிங் போம் என்று.
அக்குளை விளக்கி பார்த்தால்,
பச பச என்று ஒட்டிற்று.

இவை அனைத்தும் திருத்தி,
காரில் ஏறி கோவிலுக்கு சென்றேன்.
மாலை ஆறு மணி.
பூசை புனஸ்காரம் முடிய ஒரு மணி நேரம்
பிடித்தது. திட்டப்படி திருமண
வரவேற்ப்பு தொடங்கவேண்டும், ஏழு முப்பதிருக்கு.
எப்படி முடியும்?.
யோசிக்கும் போதே கண்ணை கட்டியது.

யார் யாரோ என் முகத்தில்
மஞ்சள் சாயம் அடித்தனர்,
நலங்கு என்ற போர்வையில்.

கூட்ட நெரிசலால் சிலர்
சந்தனத்தில் விரலை முக்கி,
கன்னத்தில் விசிறி விட்டனர்.
அந்த மஞ்சள் சாயம் என் கண்ணுக்குள்
சிவப்பு வர்ணம் போட்டது.

மச்சான் சடங்கு முடித்து.
ஒரு தட்டில் சூட் வைத்து குடுத்தான்.
வாங்கிய நான் மரத்துக்கு
பின்னால் ஆடை கலைந்தேன்.
லேட்டாய் வந்த சிலர்,
மாப்பிள்ளையை பார்க்கும் ஆர்வத்தில்
மரம் தாண்டி, என்னை மானபங்கப்
படுத்தினர்.

திடீர் என்று மின் வெட்டு வேறு.
வாழ்கையில் முதன் முறை சூட்
அணிகிறேன், அதுவும் கும் இருட்டில்.

எப்படியோ சுதாரித்து அணிந்து,
கழுத்து பட்டனும் இட்டு,
பையை தேடினால்?
டை இல்லை.
எனக்கு டை கட்ட தெரியாத
சேதி பெண் வீட்டாருக்கு தெரிந்து விட்டதோ
என்ற அச்சம் வேறு.
சரி சமாளிப்போம் என்று வெளியே
வர, கைபேசியில் மாமனார்.

உடனே மண்டபம் வர உத்தரவிட்டார்.
என்னை பார்க்க மண்டபத்தில் மக்கள்
கூட்டம் அலைமோதுகிறதாம்.

வேகமாய் செல்ல ஆயத்தப் படுத்தி.
அலங்கரிகப் பட்ட நீளமான காரின்
கதவு திறந்து, வீற்றிருந்த மர
நாற்காலிமேல் அமர்ந்தேன்.

என் மச்சானும் ஏறி, ஒரு
கயிறு கொண்டு கதவை தாழிட்டான்.
காருக்கு முன் வாத்தியக் காறர்கள்,
பின்னோ வரிசை தட்டோடு மகளிர் வலம் வர,
மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கிற்று.

தொடங்கிய மறு வினாடி,
என் கைபேசி மாமனார் அழைப்பினால் கதறியது.
விஷயம் புரிந்த நான்,

டிரைவரிடம் கேட்டேன்,
வண்டி வேகமா செல்லுமா என்று?
நாற்பது கிலோ மீட்டர் வேகம் தாண்டும் என்றார்.
அதுவும் சூடாகி விட்டால் சுனாமி தான் என்றார்.
பிறகென்ன ஹார்ன் கொடுத்து கிளப்புங்கள் என்றேன்.

சரி என்ற டிரைவர்,
நாற்காலியை நகுராமல் பிடுத்துக்கொளுங்கள்
என்றார்.

மேளக் காறர்கள் வண்டி வேகம் கண்டு ஒதுங்க.
பின் வந்தவர்கள் வாய் பிழந்து பார்க்க,
வண்டி பாய்ந்து சென்றது.

காரைக் கண்ட வீதி வாசிகள், ஏதோ
சினிமா ஷூட்டிங் என்று காமெராவை
தேடினர்.
தெரு நாய்களோ தெறித்து ஓடின.

மண்டபம் வந்து பிரேக் அடிக்க,
திரண்டு இருந்த கூட்டம் கண்டு,
மாப்பிள்ளையான நான்.
கை கூப்ப நினைத்து,
இரு கைகளையும் தூக்கியதால்,
ரோட்டில் குட்டி கரணம்
போட்டு விழுந்தேன்!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (7-Jan-12, 6:40 am)
பார்வை : 816

மேலே