ஐம்பூதங்களும் நம் நட்பிற்கு அடக்கம்!!!...

ஐவர் கொண்ட நட்பின் குழுவாய் நாம்...
அதனால் தானோ !!!???!!!....
ஐம்பூதங்களும் நம் நட்பிற்குள் அடக்கமோ!!!...
வறண்ட பூமியும் வளமாக மாறி
பசுமையாய் செழிக்கும்...
நம் நட்பின் பாதம் பட்டால்!!!...
மழைத்துளியும்
நம்மை தொட்டுச் செல்லவே
துடிக்கிறது...
நம் பாசத்தை கடல் நீராய் தேக்க!!!...
தென்றலும் நம்மை
தேடித்தான் அலைகிறது...
நம் நட்பின் சுவாசத்தை
சுகமாக வீச!!!...
கொழுந்து விட்டு எரியும்
நெருப்பின் தணலும்
அடங்கித்தான் போயின...
நம் நட்பின் பாச மழையைக் கண்டு!!!...
பரந்து விரிந்த
நீல வண்ண வானமும்
சுருங்கித் தான் போயின...
நம் நட்பின் எல்லையைக் கண்டு!!!...
-இப்படிக்கு
ஐம்பூதங்களாய் நாம்...