பேய்

விபத்தில் அகால மரணமடைந்தார்,
என் ஒரு உயிர் நண்பனின் அப்பா.

இன்று இறுதி சடங்கு முடிந்து
வலையன் காடு சுடுகாட்டில்
அடக்கம் செய்தோம்.

உறவினர்களும், அந்த உயிர் நண்பனும்
சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பினர்.
நானும் இன்னொரு நண்பனும்,
அருகில் இருந்த மதுகடைகுள்
நுழைந்தோம்.

நாங்கள் இருவரும் ஒரே
வாடைகை வீட்டில் தங்கியுள்ளோம்.
கட்டிடம் கட்டும் மேஸ்திரிகள் நாங்கள்.

சரக்கு அடிக்கும் போது,
ஈஸ்வரன் கேட்டான், நீ பேயை
பார்த்தது உண்டா என்று?
இல்லவே இல்லை,
அது வெறும் பொய் என்றேன்.

நான் பார்த்திருக்கிறேன் என்று
பட்டியளிட்டான்.

ஒரு முறை கட்டிலில்
பேயும் சேர்ந்து படுக்க வேண்டும்
என்று சொல்லி, என்னை கீழே தள்ளி விட்டது.

இன்னொரு சந்தர்பத்தில்,
குளிக்கும் போது, பேயும் சேர்ந்து
குளிக்கவேண்டும் என்றதற்கு,
முடியாது என்று மறுத்தேன்.
பேயோ படார் என்று பாத்ரூம்
கதவை திறந்து விட்டது.
குடியிருந்த அனைவரும்,
சிறு கூச்சம்கூட இன்றி என்னை
கண்டுகளித்தனர்.

வேறொரு முறை நான்
குனிந்திருந்த போது,
ஒரு பேய் குதித்து, என் முதுகில்
ஏறிக்கொண்டு, அரை மணி நேரம்
கீழே இறங்காமல் அடம்பிடித்தது.

நடுவில் இடை மறுத்த நான்,
உனக்கு வாய்த்ததெல்லாம் இளம்
மோகினி பேய்கள் என்று கலாய்தேன்.

ஆறு ரௌன்டிலேயே ஈஸ்வரன் தலை தொங்கிவிட்டது.
வீட்டில் பாப்போம் என்று சைக்கிளை
எடுத்து கிளம்பிவிட்டான்.

எனக்கு இன்னும் போதை ஏறாததால்,
ஒரு ஆப் வாங்கினேன்.

ஏனென்று தெரியவில்லை,
திடீர் என்று ஒரு பயம்,
வீடு சென்று விட மனது துடியாய்
துடித்தது.
பேசிய பேய் கதைகள் என்னை ஏதோ
செய்துவிட்டதாய் உணர்தேன்.

ஒரே கல்பில் ஆப்பை முடித்து,
தண்ணீர் பாக்கெட் கொண்டு முகம்
கழுவி, சைக்கிளை எடுத்தேன்.

மணி பார்க்க மொபைல் எடுத்தாள்,
சார்ஜு குறைந்து சாகும் தருவாயில்
இருந்தது. மணியோ இரவு 11 :50 .

சீக்கிரம் வீடு செல்ல ஒரே
குறுக்கு பாதை, வலையன் காடு
சுடுகாடு வழி.

பயத்தை புறம்தள்ளி சைக்கிளை
மிதித்தேன்.
சினிமா பாடல்கள் முணுமுணுத்துக்
கொண்டே சென்றேன்.

சுடுகாடு நெருங்கும் போது,
திடீரென்று தெரு விளக்குகள்
அணைந்தது.

திக் என்று இருந்தது.
முகமுழுதும் வியர்வை.
ஓடிக் கொண்டிருந்த இருதய
துடிப்பு, இப்போது நடக்க ஆரம்பித்தது.
கும் இருட்டு, மயான அமைதி.
ஒரு ஈ, காக்க கூட இல்லை.
எங்கோ லேசாக பீப் பீப் என்று
சத்தம் கேட்கலாயிற்று.

பயம் தொற்றிக் கொண்டு,
சைக்கிளை வேகமாக மிதித்தேன்.
இப்போது ஜல், ஜல் என்று
சலங்கை சத்தம்,
பின் தொடர ஆரம்பித்தது.

திரும்பி பார்க்க பயமாக இருந்தது.
சைகிள் லைட் வெளிச்சத்தில்,
பஞ்சாய் பறந்தேன்.
இப்போது ஜல், ஜல் சத்தம்
மிக அதிகமாக கேட்கலாயிற்று.

தைரியத்தை வரவழைத்து,
சைக்கிளை ஓடிக்கொண்டே,
திரும்பி பார்த்தேன்.
எதுவுமே இல்லை.

அப்பாடா என்று சொல்லிக்கொண்டு
திரும்பும்போது, என் சைகிள் ஏதோ
ஒன்று மேல் மோதியது.

நானோ தூக்கி எறியப் பட்டேன்.
விழுந்தது ஒரு 6 அடி உயரம்
உள்ள குழிக்குள்.

கும் இருட்டு.
படபடப்போ, படபடப்பு.
ஐயோ, ஐயோ என்று கத்தினேன்.
பதிலுக்கு ஐயோ அம்மா, ஐயோ அம்மா
என்று அலறல் கேட்டது.
பீப் சத்தம் வேறு விடாமல் கேட்டது.
நானோ திரும்பவும் தலைவெரிக்க
கத்திக் கொண்டே இருந்தேன்.

திடீரென்று செந்திலா, செந்திலா
என்று என் பெயரை பேய் உச்சரித்து.
எனக்கு பயம் உச்சம் தொட்டு,
ஏற முயற்சித்தேன்.

ஏதோ ஒரு பொந்து கிடைத்து,
ஒரு காலை அதில் சொருகி,
ஏறினேன்.
அப்போது பேய் என் காலை
பிடித்து, போகாதே, ஏற முடியாது,
என்னையும் கூடிச் செல் என்றது.
கால்கள் நடுக்கம் கண்டு,
ஐயோ, ஐயோ என்று கூவிக் கொண்டே,
ஒரு காலை விசிறி பேயை உதைத்து
தள்ளி, மேலே ஏறி விட்டேன்.

இருட்டில் எப்படியோ சைக்கிளை
தேடி எடுத்து மதம்பிடித்த யானைபோல்
மிதித்தேன்.

வீடு வந்து சேர்ந்து,
சைக்கிளை பார்த்தால்,
ஒரே அதிரிச்சி.
நான் ஓட்டி வந்தது, ஈஸ்வரனின் சைகிள்.
திரும்பவும் பயம் வந்து,
அவசர அவசரமாக பான்ட்
பாக்கட்டில் சாவி தேடினால்,
மதுக்கடையில் குடுத்த சில்லறை
காசுகள் மட்டுமே இருந்தது.

மறு பாக்கெட்டில் பீப் சத்தம்
போட்டுக் கொண்டிருக்கும் என் மொபைல்.

அப்போ ஈஸ்வரன் எங்கே?

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (5-Feb-12, 7:27 am)
Tanglish : pei
பார்வை : 2328

சிறந்த நகைச்சுவைகள்

மேலே