அவள் நினைவு!!

உடல் அசதியில் கெஞ்சுகிறது,
உன் நினைவுகளோ மனதை ரணமாக்குகிறது.

உறக்கமோ தூரத்தில் நின்று
கண்ணாமூச்சி காட்டுகிறது.

எவ்வளவுதான் கடல் அலைகள்
கரையில் மோதினாலும்
கரை தாண்ட முடிவதில்லை,
அதுபோலவே..................
உன் நினைவுகளும்,கனவுகளும்
என் மனக்கதவில் மோதி மோதி
என் இதயத்தை இம்சிக்கிறது.

படுக்கையில் புரண்டு புரண்டு
படுக்கிறேன்.

இருட்டில் உறக்கத்தை மட்டுமா
தேடுகிறேன்.

உன்னிடம் இழந்த
என் இதயத்தையும் தான்..............!!

எழுதியவர் : messersuresh (5-Feb-12, 5:40 pm)
பார்வை : 352

மேலே