என்னவளே !
இதுவரை சிரித்த சிரிப்பிற்கே
அர்த்தம் புரியாமல் தவிக்கின்றேன்
இனியும் எத்தனை நாட்கள்
தரப்போகின்றாய்...
மௌனத்தால் கொல்லும்
அந்த புதுக்கலையை...
உன்னைப்போல் ஒரு
பேசும் ஊமைப்பெண்ணை
கண்டதில்லை நான்
என் வாழ்நாளில்...
பெண்களின் சிரிப்பிற்கு பின்னால்
எத்தனையோ அர்த்தங்கள்
இருந்துவிட்டு போகட்டும்
நீ மட்டும் சிரிக்காதே
உன் சிரிப்பினால்
மனம் சிறைபட்டு தவிப்பது போதும்,
எஞ்சியிருக்கும் நாட்களிலாவது
சிரிக்க ஆசைபடுகின்றேன்...
தரமுடியாவிட்டாலும்,
தட்டி பறிக்காதே !!!