நினைத்தால் போதும் மெட்டு

நினைத்தால் போதும் பாடுவேன்
அருளை நாளும் வேண்டுவேன்
அழகாய் உன்னைப் போற்றுவேன்
அம்மா எம்மைக் காத்தருள்
அம்மா எம்மைக் காத்தருள்
பாத கமலங்கள் நாள்தோறும் போற்றி
பண்பாய் உன்னையே துதிப்பாடி வாழ்த்தி
நாளும் அழைத்தேனே விரைந்தருள் செய்வாய்
தாயே தருணமே எனைக்காக்க இதுவே.....
வா..................................(நினைத்தைல்)
வாழ்த்தி துதிப் பாடி வந்தனை செய்வேன்
விரைந்து ஓடோடி வந்தருள் தாயே
வேண்டும் வரம் நல்கும் கண்கண்ட தெய்வம்
வேறு யாதொன்று உனையன்றி தாயே
வா.........................(நினைந்தால்)