இரவின் பேருந்து பயணத்தில்
அந்த நீல நிற மெல்லிய
விளக்கு ஒளியில்,
இளம் தென்றல்
உன் காதோரக் கூந்தலை
மெல்ல வருடிச் செல்ல
என் காதருகில் நீ
கிசு கிசுக்கும் வார்த்தைகள்
எதுவும் எனக்கு கேட்கவில்லை
என்றாலும்,
உன் குரலை கேட்பதற்காக
மட்டுமே நான் தலை அசைக்க,
நான் உண்மையிலேயே
கேட்டுக் கொண்டிருப்பதாக
எண்ணி உன் இதழ்கள்,
ஆர்வத்தோடு கதை சொல்ல,
உன் கண்கள்
மற்றொரு தனி கதை சொல்ல,
இப்படியே முடிவில்லாமல்
இந்த இரவு நேர
பேருந்து பயணம் தொடரவேண்டுமென
இறைவனை வேண்டுகிறேன் என் அன்பே.......