நானும் ஓர் தாய்

மடியில் சுமக்க வேண்டிய உன்னை
மனதில் மட்டும் சுமக்கிறேன்.............
மலடி என்னும் பெயரை சுமக்கிறேன்.............
மங்கையாய் பிறந்ததில் மாதவம் செய்யவில்லை
மாதா என்று அழைக்க நீ இல்லாததால்
மண்ணில் வராத மழலையே !
மகனே, நான் பெறாத பிள்ளையே !
ஏசும் இவ்வுலகிற்குச் சொல்
மனதில் உன்னை எப்போதும் சுமக்கும்
நானும் ஓர் தாய் என்று............ .