என் குழந்தையும் நானும்! (பகுதி எட்டு)
பத்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,
உன்வருகைக்குப் பின்
ஏதும் -
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!
நீ பேசிய
சிரித்த
குறும்பு செய்த
நடக்க ஆரம்பித்த
பல்முளைத்த
என் வெப்பத்தில் உறங்கிய
எதையுமே
பதிவு செய்யவில்லை
நீ காண்பதற்கு;
ஆனால் -
நானில்லாத ஒரு
கணப் பொழுதில்
உனக்கு அத்தனையும்
புரிந்துபோகும் -
எனை நீ தேடும் அந்த தேடலில்