ஏணிகள்

ஏணிகள் ஏதுமில்லை
ஏற்றிவிடும் ஏணி என்று
சறுக்குமரத்தில் தொங்காதே!

ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கும்போது
கரையிலிருக்கும்
புற்களைப்பிடித்தும்
கரை ஏறலாம்
கப்பல் வரும் என்று
காத்திருக்காதே!

கழுதை மீதமர்ந்து
குதிரை பந்தயம்
போகமுடியுமா?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 3:28 pm)
பார்வை : 177

மேலே