ஒரு நொடி sugam

தாயே!
வெளியுலகு வேண்டாம் எனக்கு.
மீண்டும் ஒரு முறை
உன்னுள் புக வேண்டும்,
உன் மகளாய்!
உன்னுள்ளே இருந்து,
உன் காற்றே சுவாசித்து,
உன் உணவையே உண்டு,
உன் உணர்விலே என்
உணர்வை வளர்த்து,
உன் வாழ்விலே என் வாழ்வையும்
கலந்துவிட்டுப் போகிறேன்.
உன் கனவிலே என்னை நீ
ஆளாக்குவாய்!
அந்த ஒரு நொடி சுகம்
எனக்குப் போதும்.
வெளியுலக வெளிவேஷம்
எனக்கு வேண்டாம்.
உருவமே இல்லாமல்
உணர்ச்சியை மட்டும் உணர்ந்து
உன்னில் வாழும் கருவாக
நான் வேண்டும்.

எழுதியவர் : ranibala (25-Mar-12, 7:47 pm)
பார்வை : 189

மேலே