தேடல் விளைவு

அவள்
இவள்
என எவளையும் விட்டதில்லை ,
ஓரக்கண்
ஒன்றரைக்கண் என
ஒருவளையும் பாரமலில்லை ,
நாய் போல்,
தெரு நாய் போல்
வீதி வீதியாய் சுற்றாமல் இல்லை ,
சூப்பராக இல்லை
சுமாராக இருந்தாலும்
அவளை விடுவதாக இல்லை ,
தேடி பிடித்தது கண்கள்
என் தேவதையை ,
சொல்லி விட்டால் என் காதலை
அவள் சொல்லிவிடுவாள் என்னை அண்ணா என,
சொல்லாமல் விட்டால் சொல்லிவிடுவான்
என் நண்பன் அவள் அவன் காதலி என ,
துவண்டு போய்
துவைத்தெடுத்த துண்டைப்போல
தூங்காமல்
வலி தாங்காமல்
அவளை நினைத்து வீணாய் போய்விட்டேன் உடம்பு இளைத்து
நூடுல்ஸ் ஆய்விட்டேன் ,
ஓடியதில்லை நான்
கடன் வாங்கிய மஸ்தான் பாய் வந்த போதும் , ஓடுகிறேன் நான்
அவள் ஒரு பார்வை பார்த்தால் போதும் ,
புல்லட் பாய்ந்தும் இறக்காத நான்
அவள் புன்னகை பாய்ந்து இறந்து விட்டேன் ,
i என்ற வார்த்தைக்கு அடி மூச்சு வாங்கி ,
love என்ற வார்த்தைக்கு லோ லோ வென அலைந்து
you என்ற வார்த்தைக்கு ஒரு வருடம் ஆனது ,
என்னிடம் பேசினால் ஒரு மணி நேரம்
அரைமணிநேரம் english
அரைமணிநேரம் tanglish
அனைத்தும் கேட்ட வார்த்தைகள் ,
பூவுக்குள் பூகம்பம்
புரிந்தது இதன் விளக்கம் ,
மறு நாள் என் மாமனார் துரத்தினான்
விடியும்வரை என் மச்சினன் துரத்தினான்
விடிந்த பிறகும் என் அவளின் ஜிம்மி துரத்தியது ,
போதுமடா சாமி
புத்தி தெளிந்தது ,
இவள் பின்னல் ஓடியதை
ஒலிம்பிக்கில் ஓடினால்
தங்கபதக்கம் எனக்கு தான் என
புத்தி தெளிந்தது......

எழுதியவர் : சேலத்துக்கருவாயன் ......krishna (6-Apr-12, 2:13 pm)
பார்வை : 244

மேலே