இயற்றியவன் இறைவன்

உலகிற்கு
பகலும் இரவும் வேண்டும்
பகலைப் போற்றிட
கதிரவனுக்கு கவிஞன் வேண்டும்
இரவுக்கு நிலவு வேண்டும்
நிலவுக்கு காதல் வேண்டும்
காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும்
உள்ளத்திற்கு உணர்வுகள் வேண்டும்
உள்ளங்கள் உணர்வுகளின் உறவாடலில்
உலகம் தோன்றும் வாழும்
உலகிற்கு ..........
முடிவில்லாத அழகிய கவிதை
இயற்றியவன் இறைவன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-12, 10:04 am)
பார்வை : 191

மேலே