[194 ] உனைத் தேற்ற ஒருவனும் வாரானோ..?
மனித வெடிகுண்டே!
நீ
மானிடத்தின் துரோகியோ?
புனிதர்,ஒரு கடவுளின்
புகழுக்கு விரோதியோ?
ஜனித்திடுவோர் பாவமெல்லாம்
சகத்தினிலே தாமேற்றுத்
தனித்தவராய் இறந்தெழுந்தார்!
தமைநினைத்துப் பார்க்கிலையோ?
'என்னைத் துன்பம் செய்பவர்கள்
ஏதும் அறி யாதவர்கள்;
மன்னித்தருளும் பிதா'எனவே
மன்றாடி இறந்தாரே!
இனித் தோன்றி நீதிபரர்
இவரும் அன்றி வருவாரோ?
மனத்துஎண்ண மாட்டாயோ?
மன்னித் திடவும் பழகாயோ?
அனைத்து உலகும் அன்பாள
அமைதி யுடனே ஒன்றாக
உனைத்தான் தேற்றும் அருளாளன்
ஒருவன் இங்கும் வாரானோ?
-௦-