எல்லாம் இங்கே உன்சொந்தம்
கடலும் காற்றும்
நிலமும் வானமும்
யாவும் உனதல்லவா!
கதிரும் நிலவும்
கவியும் தமிழும்
எதுவும் நீயல்லவா!
உயிரும் உணர்வும்
உலகம் முழுவதும்
உனது படைப்பல்லவா!
எல்லாம் இங்கே
உன்சொந்தம் -இதில்
என்ன என்னிடம் நீகேட்கிறாய்?!