எல்லாம் இங்கே உன்சொந்தம்

கடலும் காற்றும்
நிலமும் வானமும்
யாவும் உனதல்லவா!

கதிரும் நிலவும்
கவியும் தமிழும்
எதுவும் நீயல்லவா!

உயிரும் உணர்வும்
உலகம் முழுவதும்
உனது படைப்பல்லவா!

எல்லாம் இங்கே
உன்சொந்தம் -இதில்
என்ன என்னிடம் நீகேட்கிறாய்?!

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:52 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 367

மேலே