!!!வாழ்க்கை பொன்மொழிகள் (பிரியாராம் )!!!
அழுகையை ரசிப்பவர்கள்தான்
ஆனந்தமாய் சிரிக்க முடியும்
***************
துன்பத்தில் விழுந்து எழுபவன்
வாழ்க்கையின் எல்லை வரை
இன்பம் காண்பான் .
*******************
தோல்வியை கண்டு அஞ்சாதவனை
வெற்றி துரத்தி கொண்டே வரும் .
*********************
ஒருவனை
அகந்தை ஆட்கொண்டால் -அழிவு
அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும் .
********************
மனிதர்கள்
வாழ்வில் பிரிவு இருக்கலாம்
பாகுபாடு இருக்க கூடாது ..
******************
இளைஞர்களின்
காதலில் பொய் இருக்கலாம்
காமம் இருக்க கூடாது ..
********************
பொய்
வாழ்வில் பொய் கூட உரைக்கலாம்
உண்மை பேசுபவன் போல்
ஒருபோதும் நடிக்காதே ....
************************
போர்களத்தில் மட்டுமே வாளேந்துபவன்
பூவினும் மென்மையான வீரன் ..
**************************