கைப்பிடியில் ஆதினம்

கவிஞரே!கவிஞரே!
ஆதிகால
அந்தப்புறமாய்
ஆக்கி வைத்தனரோ
ஆதினம்!
ஆதினம் கண்டு
ஆத்திரம் கொண்டது
அழகே!
ஆனால்
அவனுக்கு போய்
அழகிய கவிதையில்
அர்த்தம் சொன்னது
அசிங்கமே!
அன்று நான் உரைத்த
ஆவேசம் என்னை
ஆட்டிப்படைத்தது!
ஆனாலும்
அதற்காக நான்
அசிங்கப்படவில்லை!
"அரியதேவனே எளியவன்"
"அவனோ
அர்ப்பசோம்பன்"
அவனக்கு போய்
அங்கி
அணிவித்து
அரியனை(அரியவனை)
அர்ப்பணித்ததால்
அசிங்கமே!
ஆண்டவன் வீட்டு
அழகனே, நீர்.
ஆயினும்
அவனுக்கு போய்
அழகுப்பாகை
அணிவித்தது
அசிங்கமே! உம்,
ஆயிரம் நரைமுடியும்
ஆண்டவன் கருமுடியே!
அவனின்
அரை கருமுடியும்
ஆயிரம் நரைமுடியே!
தெருமுடியும்
தீயில்
அவன் உடல் எரியும்
விதி முடியும்
வீதியில்
அவன் உடல் கறியும்
விறகில்
வீங்கி தெரியும்.
உடல் எரியும்,
உப்புச்சேற்றினிலே
ஊர்க்காரனின்
உதவி முடியும்.
பைத்தியம் தெளியும்
கைப்பிடி சாம்பலில்
அவனின்
பதவி முடியும்!
அப்போது தானா
ஆதினம்விடியும்!...

எழுதியவர் : மணவாசல் நாகா (7-Jun-12, 10:24 am)
பார்வை : 172

மேலே