செந்நீர் துளிகள்
உன்னில் உன்னைத் தேடு
உன் உப்பு நீர்
பதில் சொல்லும் !
தினந்தோறும்
தினக்கூலி
தினச் சுமை
வழியெல்லாம்
வியர்வைத் துளிகள் அல்ல
செந்நீர் துளிகள் !
ஏழைகள்
கனவு கண்டால்
வாழ்க்கை
வசந்தமே
என்றென்றும் !
என் செந்நீர் துளிகள்
விலை பேச நீ யார்?
உன்னில் இருக்கிறதே
கேள்? அதற்கு
விலை?
என்னை நானே
சவுக்கடி கொடுக்கின்றேன்
ஏன் விழுகிறாய்
பள்ளத்தில் என்று !
களைகள் அல்ல
நச்சு விதை அல்ல
சுமை அல்ல என்றும்
எங்கள் வேர்களைப்
பிடுங்க நீ யார்?
உன்னை நீ போடு
ஏலமோ?
குத்தகையோ?
நாங்கள்
வாங்கிக் கொள்கிறோம்
உழைப்பை மட்டுமே!