சமூகத்தின் பார்வையில் - ஆண்,பெண் உறவு

இடியென்னும் கணவனோடு மழையென்னும் முத்தத்தை சூட வரும் மின்னலே. உன்னிடம் சிறிது நேரம் உரையாட நினைக்கிறேன்.

நேரம் தருவாயா எனக்கு.....

நீ உன் ஜோடியோடு பிரிந்து தான் வருகிறாய். ஆனால் நான் என் கண்முன் சேர்ந்து நடந்த ஒரு ஜோடியை பார்த்தேன். கனவுகளோடு என்முன் நடந்தார்கள். அவர்கள் நடக்கையில் ஆண் அவளை நெருங்குகிறான். ஆனால் அவள் விலகாமல் விலகுகிறாள். தான் எதிர்பார்த்த இடம் வரும் வரை அந்த பெண் வேகமாக நடந்தான். அவள் தேடி வந்த இடம் வந்தது. கடை நிறைந்த இடத்தில் அப்போது அவள் தன்
செயல்பாடுகளை முழுமையாய் மாற்றினாள். விலகி நின்றவள் அவன் அருகில் சென்றாள். அவன் தோள்களில் தன் கைகளை வைத்தாள். அந்த நேரம் தான் நான் உணர்ந்தேன் பெண்ணினத்தை ......

ஆண் நினைவில் பெண்கள் ஒரு எழுதபடாத காவியம், வரையபடாத ஓவியம், வடிக்கப்படாத சிலை என்று, ஆனால் பெண்களின் நினைவில் ஆண்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஆயுதமே என்று. அவள் நினைக்கிறாள், நினைத்ததை அடைகிறாள். அப்போது இயற்கையால் படைக்கப்பட்ட ஆணுக்கு இயற்கையில் துன்பம் இல்லை. செயற்கையால் தான் துன்பம். ஆனால் இயற்கையால் படைக்கப்பட்ட இயற்கையை படைத்திடும் பெண்ணுக்கு இயற்கையால் தான் துன்பம், செயற்கையால் அல்ல. ஆணின் மனதை எரித்து சாம்பலை பூசும் தேகம் கொண்டவர்கள் தான் பெண்கள். இயற்கையின் படைப்பில் பெண்கள் ஒரு அதிசயமே. ஆனால் ஆண்கள் பொக்கிஷம். இது தான் உணர்வு மின்னலே. உன்னை போல் தன் கணவனைவிட்டு தள்ளி நடந்து வரும் பெண்ணை எப்போது காண்பேனோ....

காலம் கடந்து நடந்து முடிந்த
நிகழ்காலம் இது.....

எழுதியவர் : சிவகுமார் ஏ (2-Aug-12, 9:15 am)
பார்வை : 653

மேலே