மனம்!
மேகங்கள் களைந்து போன பின்பும்
மறையவில்லை
மனதை விட்டு நீங்கவும்
இல்லை உன் மீது நான் கொண்ட காதல்
தீராத தாகம் என்னை வாட்டி வதைக்குது
பெண்ணே!
உன் நினைவு என்னும்
அலை
அங்கும் இங்கும் ஓயாமல்
வீசுதடி கடல் அலை போல என் மனதில்
அதில் என்றும் கரையுதடி
என் மனம்
பூப்போன்ற உன் மனம் என்னும்
கூட்டில் நான் தங்க சிறு இடம் கொடு பெண்ணே !
கடலை நம்பி செல்லுதடி நாவாய்!
உன்னை நம்பி வந்ததடி என் மனம்
உன்னுடன் வாழ உன் மனம் என்னும் கோட்டையில் சிறு இடம் கொடுப்பாயா கண்ணே!
தென்றலை கேட்டு வருவதில்லை ராகம்
உன்னை கேட்டு வரவில்லை என் மனம்
உன் அன்பை பெற வேண்டும் என்ற ஆவலில்
வந்ததடி என் மனம்
வாழ்க்கை ஒரு முறை அது உன்னோடு என்றால் அதுவே எனக்கு வரம்.