இன்று பிறந்த குறிஞ்சிப் பூ
என் நண்பனே !
இன்று பிறந்த நாள் காணும்
குறிஞ்சிப் பூவே !
உன்னை ஈன்றெடுத்த
தாய் தந்தைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல!
நன்றியுடன் வாழ்த்துகிறேன்
என் நண்பனே!
குறிஞ்சிப் பூ 12 ஆண்டுக்கு ஒரு முறை..ஆனால் ..
நீயோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும்
புன்னகைப் பூத்த புத்தம் புதிய
குறிஞ்சிப் பூவடி! இறைவன் உனக்குள் தானடி!
நீ இன்று முதல் எந்நாளும் புத்தம் புது மலராக
நீண்ட நாள் வாழ வேண்டும் என்றென்றும் !
பொறுமையும் பணிவும் நீதானடி !
குழந்தைமனசும் நீதானடி !
உன் வாழ்வு இன்பமுடன் அனைத்து உள்ளங்களுக்கும் இன்பம் சேர்க்கும் பூவே நீதானடி!
எப்போதும் என்றென்றும் !
அஞ்சாத சிங்கமடி நீ!
எல்லோர் உள்ளங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கிறாய் என் நண்பனே!
உன் புகழ் ஓங்கட்டும் இனிய நண்பனே!
இன்று போல் என்றும் வாழ வேண்டும்
இன்பமும் இன்முகமும் புதுப் பொலிவும் பெற்று
புதுப்புது அற்புதங்கள் நடத்திடு என் நண்பனே!
வாழ்க உன் தொண்டு !
வாழ்க நூறாண்டு காலம் !
வளர்க உன் புகழ் !
-----என்றென்றும் அன்புடன் ----
செயா ரெத்தினம்
என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்! ஆகஸ்ட் 15