பெண் ...
அவசரமாய் காய் நறுக்கையில் ..
குழந்தைக்கு உணவூட்டும் போதினில்
தலையனைக்கு உறை போடுகையில்
கணவருக்கு உணவு பரிமாறுகையில்
என -எழுத முடியா வேளையிலெல்லாம்
எண்ணற்ற கற்பனைகள்
உள்ளுக்குள் அடித்தோயும்..
அத்தனையும் விட்டு விட்டு
பேனாவை எடுத்துக்கொள்ள
ஆண்களை போல் பெண்களுக்கு
முடிகிறதா இப்போதும்?