சிற்பம் பார்த்து சிந்தனை சிறகடிக்க

தட்டித் தட்டி
எழுப்பிவிட்டால்
துயில் களைந்துவிட
இத்தனை தாமதமா !

செதுக்கிச் செதுக்கி
சிற்பமாய் வடித்திட
உளியொன்று களைத்திட
இத்தனை மௌனமா !

உருவமாய் மாற்றிட
உள்ளம் தூண்டிவிட
உழைப்பும் சேர்ந்துவிட
மறைத்து வைத்திருந்தது
இத்தனை அழகா !

கற்பனைகள் தந்துவிடும்
அற்புதம் ஒளித்து வைத்து
கவித்துவமாய் பேசிவிடும்
இத்தனை கலைநயமா !

உயிருள்ள உருவங்கள்
உனைக் கடந்து போவது
விசித்திரமாய்க் கண்டு
விருப்பமுடன் ரசிக்கின்றாய்
இத்தனை ஆற்றலா !

எழுதியவர் : (28-Sep-12, 1:53 am)
பார்வை : 163

மேலே