செவ்வாய் அழுகிறது

பொன்னான
பூமியை
புகை போட்டு
மாசாக்கியவன்

பசுமை
நிலங்களை
பாலைவனமாக்கியவன்

சிகரங்களை
சிதைத்துவிட்டு
ஆழக்கடல்களை
அசுத்தமாக்கியவன்

மோட்சம் தந்த
நதிகளை
மோசமாக்கியவன்

பாவி
மனிதன்
இங்கு ஏன் வந்தான்?

எழுதியவர் : எஸ்.வை.சசீ (21-Oct-12, 4:28 pm)
பார்வை : 185

மேலே