செவ்வாய் அழுகிறது
பொன்னான
பூமியை
புகை போட்டு
மாசாக்கியவன்
பசுமை
நிலங்களை
பாலைவனமாக்கியவன்
சிகரங்களை
சிதைத்துவிட்டு
ஆழக்கடல்களை
அசுத்தமாக்கியவன்
மோட்சம் தந்த
நதிகளை
மோசமாக்கியவன்
பாவி
மனிதன்
இங்கு ஏன் வந்தான்?