சில முயற்சிகள்...

விறகாய் எரிகிறது...
இற்று விழுந்த மரம்.

சாம்பலான பின்னும்...
உரமாகிறது.

வாழ்ந்து கொண்டே இருக்கிறது ...
மரம்.
************************************************
கல்லைக் கடவுளாக்குகிறது...
கடவுளைக் கல்லாக்குகிறது...

புரளும் நாக்கு.
**************************************************
இருந்தபோது..."இறந்து போ"...என்றாய்.
இறந்த கணத்திலோ....
அழுது புரண்டு..."எழுந்து வா"..என்றாய்.
என் காது...இனிக் "கேட்காது"...என்பதால்...
கடவுளாக்கி விட்டாய்....நீ
என்னை....இந்தக் கணத்தில்.

"வாழ்க்கை ஒரு நாடகம்தான்..."
பொய்யில்லை.

இனி...
நீ இயக்கியபடியே நான்...

புன்னகைத்துக் கொண்டே இருப்பேன்...
உனது அறையில்....
நீ தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்...
எனது புகைப்படத்தில்....

ஒரு கோபமும் காட்டாமல்.

எழுதியவர் : rameshalam (1-Dec-12, 5:45 pm)
Tanglish : sila muyarchikal
பார்வை : 239

மேலே