வெளிநாட்டு அந்தஸ்து

முள்ளி வாய்க்கலில் இருந்தும்
முள்ளுக்கம்பிக்குள் இருந்தும்
முந்தியடித்து ஓடிவந்தோம்
முத்தமிழ் கொண்ட தமிழர் நாம்


முப்படைக்கு தப்பிவந்தும் மீண்டும்
முள்ளுகம்பிக்குள் இருக்கிறோம்
கம்பியும் வேறு காப்பவரும் வேறு
கண்டமும் வேறு தருவதோ சோறு

அகதிஎனும் முத்திரை தருவது யாரு

அசட்டையாக ஜோசித்தால்
அனைத்துமே கிடைத்தல் போல் உள்ளது
ஆழமாக ஜோசித்தால் அங்கிருந்த அதே கம்பி

கம்பியின் வடிவம்தான் வேறு ஆனால்
கம்பிக்குள்ளயே இன்னும் தமிழர் நாம்

எழுதியவர் : மன்னார் சிறி (7-Dec-12, 11:14 am)
பார்வை : 258

மேலே