நட்டவுடன் பூப்பூக்கும்

நட்பு எனும் செடியொன்றே
நட்டவுடன் பூப்பூக்கும்!
நம்பிக்கை எனும் நீரூற்ற
நாள்தோறும் கனி கொடுக்கும்!
ஆணிவேரின் அடிவரைக்கும்
அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்!
ஆயிரம்பேர் நாடினாலும்
அனைவருக்கும் நிழல் கொடுக்கும்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (14-Dec-12, 4:22 pm)
பார்வை : 295

மேலே