லிங்கு ராம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லிங்கு ராம் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 15-Mar-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 11 |
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .
என்னவளைக் காண வேண்டும் -என்ற
எண்ணமது நிறைந்திருக்க
என்னவனைக் காண வேண்டும் -என்ற
எண்ணமதை மறந்து விட்டு
அகத்தாழிட்டு தூங்கும் -அவளுக்கு
என் மனத்தாழினை பூட்ட வழி என்னவோ!!!
உள்ளத்தால் அழுகாதே -ஆம்
வலியனவாம் காதல்
எண்ணத்தால் ஒன்றுபட -நம்
வாழ்க்கையை அறிவுறுத்து
மௌனத்தால் ஆகும் -என்ற
விதி தனை மறந்து
அறிவால் செயல்படுத்து ...
விதியொன்றை யார் செய்தான்
வினை தீரா உலகமிது
மதி தன்னை மறந்துவிட்டேன்
சதி செய்த வஞ்சனையால்
கருவறையை மறந்திருந்தேன்
கடுகளவும் நினைப்பில்லை
பினி நெருங்கும் நேரங்களில்
பணி ஒன்றே நன் செய்தேன்
காலங்களை நீ உணர்ந்தே
என்னுறவை இணைக்க வந்தாய்
கண் பட்டதானென்று -எம்
வினையை நீ மறைத்தாய்
முற்போக்கு சிந்தனையில்
முதிர்ச்சியுற்று நீ இருந்தும் -எம்
மனது ஏற்கவில்லை
மாதவத்தை நினைக்கவில்லை
காலம் உன்னை கூட்டி செல்லும்
நாட்களிலே நான் உணர்ந்தேன் -என்
நெஞ்சம் பதைக்கிறது
விதியென்று நீ சென்றாய்
காலடியாய் பார்க்கின்றேன்
பாவி மகன் பின் தொடர்வேன்
இயலாமை பூண்டுவிட்டேன்
எ
உள்ளத்தால் அழுகாதே -ஆம்
வலியனவாம் காதல்
எண்ணத்தால் ஒன்றுபட -நம்
வாழ்க்கையை அறிவுறுத்து
மௌனத்தால் ஆகும் -என்ற
விதி தனை மறந்து
அறிவால் செயல்படுத்து ...
"நல்ல வேலை செஞ்சீங்க,
தொல்லை ஒழிந்தது"
முத்த மழை பொழிந்தாள்
தாரம் பள்ளியறையில்.
"என்ன தப்பு செஞ்சேன், இங்க
விட்டிட்டுப் போய்ட்டான்"
கண்ணீர் மழை சொரிந்தாள்
தாய், முதியோர் இல்லத்தில்.....
என்னவளைக் காண வேண்டும் -என்ற
எண்ணமது நிறைந்திருக்க
என்னவனைக் காண வேண்டும் -என்ற
எண்ணமதை மறந்து விட்டு
அகத்தாழிட்டு தூங்கும் -அவளுக்கு
என் மனத்தாழினை பூட்ட வழி என்னவோ!!!
அஞ்சா நெஞ்சன்
பட்டுக்கோட்டை அழகிரிசாமி .!!
சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.
ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின் கல்லடி, சொல்லடி, செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயம
எந்த ஒரு செயலையும் செய்யத் தெரியாமல் இருப்பதை விட உயிரை விடுதலே மேல் என்பார்கள் சிலர். அது தவறான கருத்தாகும்.எந்த ஒரு மனிதனும் செயல்பட தெரியாதவனாக இருக்க மாட்டான் ,அவன் செய்ய வேண்டிய செயலை அவன் விரும்பிய முறையில் செய்ய முடியவில்லையே என்று தான் செயலற்றவனை இருப்பான்.இது தான் நடைமுறையில் உண்மை .பெரும்பாலாக மாத ஊதியம் பெரும் ஒருவரிடம்,இந்த சன்மானத்தை முழு அர்பணிப்போடுதான் பெற்றுக் கொண்டாயா என கேட்டால் அவர் இல்லை என்று தான் பதில் கூறுவார்.காரணம் அவர் விரும்பியபடி செயல்பட முடியாமல் ஒரு இயந்திரத்தைப் போல் செயல்பட்டுத்தான் அது கிடைக்கப் பெற்றது என்பர்.எந்த ஒரு செயலையும் செய்த பின் காலம் தான் அதற்கு பத
இத்திவ்ய பிரபஞ்சத்தில்
நல்லதொரு இனியோனாய்
நன் இருக்க...
வட்டமிடும் கழுகாக
வானுயர பறந்து வந்தேன்
எட்டுத்திக்கும் பார்த்துவிட்டேன்
எனக் கியைந்த பெண் இவளே...
பன்னிருவர் புகழாலே-பாமரர்கள்
வாழ்த்து சொல்ல ...
சூரியனார் வேடம் தரித்து
நன் வருவேன் -அங்கு
ராஜன் போல....
தூரத்தால் பிரிவு வரும்-என்ற
துயரங்கள் எனக்கில்லை
காலத்தின் நிகழ்வுதனை -என்
கண் முன்னே பார்க்கின்றேன்
தூது விடும் மினிலையில்
அசைந்தாடும் என் மனது
தூங்கா வனம் என்னும்
நட்புறவாய் நாம் இருக்க
என் நட்பே கலங்காதே
உனை போலே நானிருப்பேன்...