ரகுராம் ரத்தினம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரகுராம் ரத்தினம் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 03-Jan-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 7 |
காற்றில் கை வீசி தேடினேன்
கண் எதிரே பேசி சிரித்த நண்பனை,
எந்த பிரிவும் இப்படி வலித்தது இல்லை,
இது போலே கலங்க வைத்ததில்லை,
உன் உயிரை நீ பிரிந்து,
என்னை ஏன் பிணமாக்கினாய்,
தாய் பாலில் பங்கு வைத்ததில்லை,
தாய் போலே நீ இருந்தாய்,
தந்தை விரலில் பங்கு வைத்தது இல்லை,
தமயன் போலே நீ இருந்தாய்,
என்ன செய்ய என் நண்பா,
நான் மட்டும் தனியாய்..
சிந்தும் துளியாக நீ பிறந்தால், உன்னை
ஏந்தும் மண்ணாக நான் பிறப்பேன்...
சிாி க்கும் மலராக நீ மலர்ந்தால், உன்னை
தாங்கும் காம்பாக மாறி விடுவேன்...
வீசும் தென்றலாய் நீ வந்தால், உன்னை
கட்டி அணைக்கும் மலை நான் ஆவேன்...
சூரியன் போலவே நீ இருந்தால், உன்னை
சுற்றி வரும் பூமி நான் ஆவேன்...
பாடும் அலைகடல் நீ என்றால், நீ
தவழும் கரைகளும் நான் ஆவேன்...
வெள்ளி வெண்ணிலவு நீ என்றால், அந்த
பரந்த வானமே நான் ஆவேன்...
ஓடும் நதியாக நீ இருந்தால், நீ
சேரும் கடலாக நான் இருப்பேன்...
முத்தாக நீயும் பிறந்திருந்தால்,
சிப்பியாக உன்னை காத்து நிற்பேன்...
ஆனால் மனிதனாக நீ பிறந்ததனால், உன
அரும்பிலே, பிள்ளை வயதிலே
நம் உறவது துளிர்த்ததே........
பால் பேச்சில் பாசம் கிடைத்ததே........
மொட்டுக்கள் போல் உன் புன்னகையில்
எந்தன் நாட்கள் நகர்ந்ததே........
வாழ்க்கையே உன்னிடம் துவங்குதே........
தவழ்ந்த நான் எழுந்து நடக்கையிலேயே
வழித்துணையாய் வந்தவள்........
பள்ளி செல்லும் அந்த பாதையெல்லாம்
அவள் மூச்சால் நிறைத்தவள்........
தென்னைமரம் மடியினிலே அமுது உண்டோம்........
யானைக்குழாய் நீர் குடிக்க போட்டி வைத்தோம்........
ஒரு மைல் தூரமே கொண்ட பாதையிலே
கோடி இன்பங்கள் நாம் காண்கிறோம்........
துன்பம் என்றும் சிறு கவலை என்றும் உள்ள வார்த்தைக்கும் பொருள் அறிந்திடோம்........
வங்கக் கடல் ஈன்ற சிங்க மகன் போற்றி,
தங்கத் தமிழகத்தின் தெய்வமகன் போற்றி,
விண்முட்டும் இமயம் முதல் முக்கடல்சேர் குமரி வரை
புகழ் மண்டிக் கிடக்கும் பாரதத் தாயவளின்
தலைமகனே உத்தமனே போற்றி போற்றி...
கனவுகள் காண கற்றுக்கொடுத்தவர் நீர்,
அக்கனவு மெய்ப்பிக்க அருகில் நின்று தட்டிக்கொடுத்தவரும் நீர்...
இன்று கனவில் மட்டும் காணும் உருவாய் தாம் மாறியது யாராலே?
இச்சோதனை எமக்கு எதனாலே?
பறவையைக் கண்டு பறக்க ஆசை கொண்டாய்,
கூண்டுப்பறவையான எங்கள் மனதிற்கு சுதந்திரமும் அளித்தாய்,
இன்று ஆறடி கூண்டுக்குள் தாம் உறங்கிப் போனால்
தத்தளிக்கும் எங்களுக்கு கலங்கரை விளக்கமும் யாரோ?
இந்தியப் பெர
கூதல் காற்றும் காதின் ஓரம் வீசியதே...
காதுக்குள்ளே உந்தன் வாசம் பேசியதே...
நிறங்கள் யாவும் மயங்கிப் போகும் நேரமிது...
இருவிழியில் சந்திரன் சங்கமிக்கும் வேளையிது...
வண்ணங்கள் ஒன்றையும் காணவில்லை...
கரும்போர்வைகள் போர்த்தியே உறங்கியதோ?
அலைகள் மோதும் நிலமகளை, கண்டு
விண்மீன் கண்கள் சிமிட்டியதோ?
மலைகள் மீதும் ஏறி நின்றேன்
எந்தன் நிலவே உன்னைத் தீண்டிடவே...
ஆனால் ஏனோ முடியவில்லை,
அதுவும் எதனால் தெரியவில்லை...
ஒவ்வொரு நாளும் தேய்கின்றாய்,
காணாமலும் நீ போகின்றாய்...
மீண்டும் பிறையாய் வளர்கின்றாய்,
முழுமதியாகி ஒளிர்கின்றாய்...
பூமியாக நான் நின்றிருப்பேன்,
பொற்கொடி கர்ப்பம் தான்தரிக்க,
தொப்புற்கொடியாய் காம்பிருக்க,
பூமகளே நீ அவதரித்தாய்,
செஞ்சூரியன் சிவப்பு நிறத்தவளாய்...
வண்ணத்துப்பூச்சியை மன்னவனாய்,
மணக்கும் எண்ணம் கொண்டவளாய்,
உள்ளத்தில் ஊறிய காதல் சுகம், அதை
தேனாய் மாற்றினாய் என்ன வளம்?...
மாய வண்ணம் காட்டி நின்றாய்,
மந்திர வாசனை வீசி வந்தாய்,
தந்திரமாய் தம் அன்பு மனதில்,
பட்டாம்பூச்சிக்கு பட்டம் அளித்தாய்...
மெல்லிய தம்மிரு சிறகினிலே,
வானவில்லின் வர்ணம் கொண்டாய்,
தனக்கென பிறந்த பூமகள் இவளென,
கண்டவுடன் நீ கண்டுகொண்டாய்...
வெயிலில் மலர்மகள் வாடுகிறாள் என,
நல்ல சிறகை குடையாய் விரித்துவிட்டாய்...
வெப்பம்