கார்த்தி கண்ணதாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்தி கண்ணதாசன்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  767
புள்ளி:  39

என் படைப்புகள்
கார்த்தி கண்ணதாசன் செய்திகள்
கார்த்தி கண்ணதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2024 5:43 pm

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

காதலின் தேவி கவிதைகள் பாடி
கனவுகள் வழியே கலைநயம் தேடி
அன்னம் என்றே சொல்லும் நடையில்
கன்னல் மொழிகள் காற்றினில் ஆட

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

முத்தங்கள் என்றே பூமழை சிந்த
சத்தங்கள் கொண்டே சங்கீதம் முந்த
மயங்கும் மாலை மந்திர வேளையில்
இயங்கும் மனங்கள் இன்னிசை பாட

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

கூடிய பொழுதில் குறிஞ்சியும் மலர
வாடிய பொழுதில் நெருங்சிமுள் இடற
தேடிய கண்களில் கலக்கம் தொடர
நாடிய நாயகன் நினைவை சுமந்து

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும்

மேலும்

கார்த்தி கண்ணதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2023 12:21 pm

முல்லை நிலத்திலே பெரும்பொழுது கார்காலம்
இல்லை அத்தனையும் ஓரிரவில் கழியுமென்று
மோகத்தின் முக்திக்கு வழிகாண எத்தனித்து
தாகத்தில் சித்திக்கும் தத்துவங்கள் கற்பித்து

முத்தமிட்டு துவக்கினேன் காமனின் கணக்கை
மெல்லமெல்ல நீக்கினாள் மங்கைதன் பிணக்கை
உச்சிவந்த பால்நிலவும் வெட்கமுற்று ஒளிந்துவிட
பாதைதேடி வந்ததென்றல் பாதையின்றி ஓய்ந்துவிட

வலிக்கவலிக்க விரகம் தணிக்க வெட்கத்தை
விலக்கவிலக்க நித்தம் நடைபயின்று நதிபலவும்
கலக்கக்கலக்க ஆர்ப்பரிக்கும் கடல்போல ஓயாமல்
சலிக்கச்சலிக்க கூடிக் களிக்கும் சுகம்தொடர

நித்தம் புதுசந்தம் தரும் கவிதைஎன
முத்தம் பலதந்தும் சித்தம் தடுமாற
உன் மத்தம் தலைக

மேலும்

கார்த்தி கண்ணதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2022 4:36 pm

தன்னரும் பந்தமதில் பங்குகொள்ளும் பூங்குயிலே
பொன்னரும் பண்பிலே பொலிந்துவரும் பொன்மயிலே
கன்னலும் சலித்துவிடும் காதல்மொழிக் கண்மணியே
பன்னரிய பாடல்கள் உனக்கென்று பாடவோ

முன்பூத்த மலரிடையே முகம்பூக்கும் குறுநகையோ
கண்பார்த்த சடுதியிலே கரைத்துவிடும் கூர்விழியோ
தன்மை யென்னின் தகைசான்ற அருங்குணமோ
மென்மை யென்னின் எழிற்சிலை வடிவழகோ

என்னவென பாடவோ எதுவென்று பாடவோ
இன்னமுதை இன்பமென்று இசைகூட்டிப் பாடவோ
நன்மைதரும் காரியங்கள் நடக்குமென்று பாடவோ
பின்தொடரும் இடரனைத்தும் தொலைந்துவிட பாடவோ

என்மனதை இன்னதென்று இனங்காட்டிப் பாடவோ
அன்னம்உனை என்னுயிரில் இணைத்தகதை பாடவோ
இன்னுமொரு பிறப்பெடுக்க நினைத்ததை பாடவோ

மேலும்

கார்த்தி கண்ணதாசன் - கார்த்தி கண்ணதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2016 3:29 pm

>தனித்த நிலையில் இதுவரை இருந்துவிட
இன்றேனும் புதியதாய் அனுபவம் தருவதற்கோ
>இனித்த மொழிபேசி இதழோடும் சுவைபூசி
இழைந்தோடும் அழகை இன்னமும் மெருகேற்றி
>பனித்த துளியெலாம் துடைத்த புதுமலராய்
பளிங்கு மேனிதன் நளினத்து நடைவைத்து
>குனித்த புருவத்தின் கீழிரண்டு அம்பெடுத்து
மண்ணிலே வீசிவந்தாள் மனமுற்ற மயக்கஞ்சொல்ல!!!

>வரிசிலை கோமானும் உணர்த்தினன் தீரம்
வில்லொடித்த பிறகன்றோ வரித்தனன் தாரம்!!
>நறுங்குழல் நாதம் தருஞ்சுகம் போதும்
கரியவன் தனக்கு கோதையர் கீதம்!!
>கரிக்கி ளையோனும் மரிகடல் கடந்து
சேரிடம் சேர்ந்தனன் தேவசேனை மணந்து!!
>அரியவர் பலரும் அருஞ்செயல் புரி

மேலும்

நன்றி 16-Jul-2020 1:19 pm
மறுப்பதில் நெஞ்சம் முள்ளை விதைத்து நினைவில் சுமையை அறுவடையாய் தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:56 pm

எதுவரை வாழ்வு எனைநடத்தி போயினும்
அதுவரை உயிரும் உணர்வற்று போயினும்
எப்பரி மாணத்தில் உற்சாகம் பிறக்குமோ
முப்பரி மாணத்தில் முழுசுகம் கிடைக்குமோ
மோகம் பிறக்கும் மைய புள்ளியில்
தாகம் மறக்க போதையில் கிடக்கும்
மேதினி போற்றும் கவிஞர் பலர்க்கும்
ஓர்கையில் மதுவும் மறுகையில் மாதரும்
தீர்க்கமாய் கேட்டான் பாவலன் ஒருவன்
மயக்கமாம் ஆடைசூடி மன்னனிடம் சேர்வாள்
தயக்கம் விடைபெற்று நாணமும் முடிவுற்று
நாயகன் சலிக்குமட்டும் கூடிக்கூடி களித்திருந்து
பிரிகின்ற அவசரத்தில் ஆடையை மறந்தாள்
கூடலிற் கண்டசுகம் கருத்தில் நிழலாட
மடந்தை மறந்துவிட்ட ஆடைதன் கரத்திலேந்தி
நடந்ததை எண்ணியெண்ணி மஞ்சத்தி

மேலும்

கார்த்தி கண்ணதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2020 12:38 am

கட்டான தேகத்தில் கனியிதழ் தீரத்தில்
முட்டிவந்த மோகத்தில் விட்டுவந்த நாணத்தை
இட்டுவந்த பெண்மயிலை தொட்டுவந்த பூங்காற்றே
தட்டாமல் தழுவாமல் கட்டழகை கடந்துவா

சொட்டுத்தேன் தரும்சுகத்தை பாட்டுந்தான் தருமென்று
காட்டித்தான் உரைப்பாயோ தொட்டுத்தான் கரைப்பாயோ
மட்டிலா ஞானத்தை மட்டும்தான் கொடுப்பாயோ
தொட்டிலாடும் சந்தியிலே தாலாட்டும் படிப்பாயோ

விட்டிலாடும் தீச்சுடரே வீட்டிலாடும் சுடரொளியே பட்டிலாடிப் பயில்வதற்கே பூத்துவந்த புதுமலரே
வட்டவிழி பார்வையிலே மயக்கந்தரும்

மேலும்

கார்த்தி கண்ணதாசன் - கார்த்தி கண்ணதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2020 12:11 am

காரிகையே கண்மணியே
தாரகையே தண்ணொளியே
பேரெழிலே பெண்ணரசே
பூவிழியே புதுமலரே
ஆரமுதே அருட்சுடரே
பால்நிலவே பைங்கிளியே
மாமழையே மலர்வனமே
தீங்கனியே தடக்கொடியே
தாழிசையே தவப்பயனே
நேரிசையே நிறைகனியே
ஏழிசையே எழில்நலமே
ஊழ்வினையே உறுபயனே
ஊனுருக்கும் உயர்மொழியே
தேன்கலந்து தான்சுவைக்க
நான்கலந்து நிதங்களிக்க
தேன்தமிழே தெளிசுனையே
வான்தமிழே வளர்கலையே
ஊன்தமிழே உயிர்நிலையே!!
பண்போடு பரவிவந்து
கண்ணோடு கலந்துநின்று
பெண்ணாக பிறந்துவந்து
தடம்பார்த்து நடக்கின்றாய்!!
உன்னெழில் நலம்காண
உற்றசுவை தினம்பேண
என்புருக இசைமீட்டி
அன்புருக நீயிருக்கும
இடம்பார்த்து நடக்கின்றேன்!!
முற்றும் முழுதுணர்ந்த
கற்

மேலும்

ஊனாகவும் உயிராகவும் திகழும் தமிழே என பொருள்படும். என்போடு இயைந்த தொடர்பு என வள்ளுவர் எலும்போடு சதைக்கு உள்ள தொடர்பை அன்போடு உயிர்க்கு உள்ள தொடர்பாக உருவகப்டுத்தியதை உதாரணமாகக் கொண்டு சதையால் செய்யப்பட்ட உடலும், அந்த உடம்பிற்கு உள்ளே திகழும் உயிர் நிலைத்திருக்கும் ஸ்தானமும் தமிழே எனும் பொருள் தான் ஊன்தமிழ் என்ற சொல்லை பயன்படுத்தினேன், அடுத்த வார்த்தையான உயிர்நிலையே என்தையும் இணைத்து பாருங்கள் 11-Jul-2020 11:41 pm
ஊன்தமிழே _ என்பதற்கு விளக்கம் தாருங்கள் 09-Jul-2020 8:44 am
கார்த்தி கண்ணதாசன் - கார்த்தி கண்ணதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2016 12:20 pm

முந்தாத வேலிரண்டு முகத்திலே விழிஎன்று
சிந்தாத மைதீட்டி சிங்கார பொட்டுமிட்டு
வந்தாரை வாழ்விக்கும் வளமான இனம்தேடி
வந்தாடும் மலரேஉன் வழிபார்த்து பாடுகிறேன்!!

சிந்தையில் நெடியவர் கருத்தினில் கவியூற
முந்திவரும் சொல்லாட காவியங்கள் கரையேற
அந்தியில் அரும்புகிற பொன்மலர் கூட்டத்தில்
சந்திரனும் தலைகாட்டி தண்ணொளி வீசிவர

முந்தைய நாட்களில் சுட்டெரித்த சூரியனை
சிந்திக்க தவறுமோ இச்சிறு ஞாலம்!!
நிந்திக்க தெரிந்தால் நீதிசொல்ல போதுமோ
நிந்தனை யாவும் நியாயங்கள் ஆகுமோ!!!

சீறிவரும் காளைகள் முன்னிற்க திறனற்றோர்
ஏறிட்டும் காணவும் பயந்தவர் தடுத்ததை
மீறிவரும் வீரத்தை யார்தடுக்க கூடும்;குருதியில்
ஊறிவரும் உ

மேலும்

அவசியம் எழுதுவேன். வாழ்த்துக்கு நன்றிகள் 09-Jul-2020 12:49 am
தமிழே! தேனே! கனியே! அமிழ்தே! அன்பே! அழகுக் கலையே! எழிலே! அறிவே! படைப்புக்கு பாராட்டுகள். தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம் நன்றி 29-Mar-2016 8:07 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jan-2016 11:03 pm

காரிகையே கண்மணியே
தாரகையே தண்ணொளியே
பேரெழிலே பெண்ணரசே
பூவிழியே புதுமலரே
ஆரமுதே அருட்சுடரே
பால்நிலவே பைங்கிளியே
மாமழையே மலர்வனமே
தீங்கனியே தடக்கொடியே
தாழிசையே தவப்பயனே
நேரிசையே நிறைகனியே
ஏழிசையே எழில்நலமே
ஊழ்வினையே உறுபயனே
ஊனுருக்கும் உயர்மொழியே
தேன்கலந்து தான்சுவைக்க
நான்கலந்து நிதங்களிக்க
தேன்தமிழே தெளிசுனையே
வான்தமிழே வளர்கலையே
ஊன்தமிழே உயிர்நிலையே!!
பண்போடு பரவிவந்து
கண்ணோடு கலந்துநின்று
பெண்ணாக பிறந்துவந்து
தடம்பார்த்து நடக்கின்றாய்!!
உன்னெழில் நலம்காண
உற்றசுவை தினம்பேண
என்புருக இசைமீட்டி
அன்புருக நீயிருக்கும
இடம்பார்த்து நடக்கின்றேன்!!
முற்றும் முழுதுணர்ந்த
கற்

மேலும்

ஊனாகவும் உயிராகவும் திகழும் தமிழே என பொருள்படும். என்போடு இயைந்த தொடர்பு என வள்ளுவர் எலும்போடு சதைக்கு உள்ள தொடர்பை அன்போடு உயிர்க்கு உள்ள தொடர்பாக உருவகப்டுத்தியதை உதாரணமாகக் கொண்டு சதையால் செய்யப்பட்ட உடலும், அந்த உடம்பிற்கு உள்ளே திகழும் உயிர் நிலைத்திருக்கும் ஸ்தானமும் தமிழே எனும் பொருள் தான் ஊன்தமிழ் என்ற சொல்லை பயன்படுத்தினேன், அடுத்த வார்த்தையான உயிர்நிலையே என்தையும் இணைத்து பாருங்கள் 11-Jul-2020 11:41 pm
ஊன்தமிழே _ என்பதற்கு விளக்கம் தாருங்கள் 09-Jul-2020 8:44 am
கார்த்தி கண்ணதாசன் - கார்த்தி கண்ணதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2016 12:18 am

போனவர்கள் பாடியது போதுமென்று போனவளே
ஆனமட்டும் உன்புகழை பாடவென்று பிறந்தேனே
ஏனென்று அறியாமல் போவதுபோல் நடிததென்னே
நானன்று கண்டதை கவிதையில் சொல்கிறேனே
வீணென்று வீதிவழி விடோழித்து போகுமுன்னே
தேனென்று வாய்மலர்ந்து சொன்னால் தான் என்னே!!

வேண்டியவர் வாழ்விலே உன்னத நாளென்று
வேண்டியவர் யாவர்க்கும் வழங்கினார் விருந்தொன்று
நெருங்கிய உறவில்லை முன்பின் தொடர்பில்லை
வருந்தி அழைக்கவில்லை அதுவுமிங்கு வழக்கில்லை

உடனிருப்போர் போவதென்று முடிவெடுத்த காரணத்தால்
கடனென்று நானும் போய்வர எத்தனித்தேன்
விதியென்று ஏற்றுவிட்ட பணிநேரம் முடித்து
வீதிக்கு வந்தேன் விருந்துண்டு அடுத்து!!!

உற்றவர் கூட

மேலும்

நன்றி தோழரே 30-May-2016 8:02 pm
அருமையான படைப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:51 am
மேலும்...
கருத்துகள்

மேலே