கார்த்தி கண்ணதாசன்- கருத்துகள்

ஊனாகவும் உயிராகவும் திகழும் தமிழே என பொருள்படும். என்போடு இயைந்த தொடர்பு என வள்ளுவர் எலும்போடு சதைக்கு உள்ள தொடர்பை அன்போடு உயிர்க்கு உள்ள தொடர்பாக உருவகப்டுத்தியதை உதாரணமாகக் கொண்டு சதையால் செய்யப்பட்ட உடலும், அந்த உடம்பிற்கு உள்ளே திகழும் உயிர் நிலைத்திருக்கும் ஸ்தானமும் தமிழே எனும் பொருள் தான் ஊன்தமிழ் என்ற சொல்லை பயன்படுத்தினேன், அடுத்த வார்த்தையான உயிர்நிலையே என்தையும் இணைத்து பாருங்கள்

அவசியம் எழுதுவேன். வாழ்த்துக்கு நன்றிகள்

பெண்ணுக்கு ஒருதரம் மணிச்சரம் பூட்டினால்
விண்ணுக்கே தெரியுமே அன்னாளின் கணவனை!!

முன்னவர் எல்லாம் மூடர்கள் அல்லவே
என்னவர் ஒழுக்கம் என்றும் மேன்மையே!!

பெண்ணுக்கு கழுத்தோடு இட்டதொரு தாலி
ஆண்பிள்ளை தனக்கோ நெஞ்சிலொரு வேலி!!

சமுத்திரம் முழுதும் முத்தாவது கிடையாது
சிப்பியின் கருசேரும் ஒன்றுக்கே மரியாதை!!

தகுந்த நாயகனை தாய்தந்தை பார்த்துவைக்க
உகந்த வாழ்வை பெண்ணுலகம் பெற்றால்!!!

அருமை, யதார்த்தம் தொனிக்கும் கவிதை, தங்கள் வரிசைபடுத்திய விதம் மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்

மிக்க நன்றி, தங்கள் வாழ்த்து எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது !!!


கார்த்தி கண்ணதாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே