வைரமுத்து - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : வைரமுத்து |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Jan-1908 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 0 |
உலகாளும் பிரமன் படைத்த
ஓரறிவு உயிருக்குத் தான்
எத்தனை இளகிய மனம்!
பசி போக்க உணவளித்தது!
தாகம் தணிக்க வழி வகுத்தது!
உயிர் வாழ இடம் கொடுத்தது!
பிராண வாயு உவந்தளித்தது!
புல்வெளி அழகு பாய் விரித்தது!
குளிர் தென்றல் சுகம் சேர்த்தது!
அதே பிரமன் படைத்த
ஆறறிவு மனிதனுக்கு மட்டும்
ஏனிந்த இறுகிய மனமோ?
ஆகாயத்தை அளக்கத் துடிக்கும் அவன்
அறம் தவறி மரம் அறுத்து
அடைந்த பயன் தான் என்ன?
வளி மண்டலத்தில் ஓட்டை
வியாதிகள் நிறைந்த வாழ்க்கை
தண்ணீருக்கு விலை
நாளை காற்றுக்கும்..
இவையா சாதனைகள்?சுயநலம் தவிர்த்து
சற்றே சிந்தித்தால்
சந்திக்கவிருக்கும் பேரழிவு தடுக்கலாம்!
சந்ததிகளும் வாழ வழி விடலாம்!!
சிந்திப்பானா?
மனிதன் நாவில் பிறக்கும்
பெருவலி மிகு சொல்லே!
உன் பொருளுக்கு இத்தனை
உயிர் சேர்த்தது யாரோ?
மனமொத்த நண்பர்கள்
மனங்கசந்து பிரியச் செய்கிறாய்!
அறிமுகம் அறியாதவனை
ஆருயிர் தோழன் ஆக்குகிறாய்!
தோல்வி அடைந்தவன்
மனம் நோகச் செய்கிறாய்!
மனமுடைந்த ஒருவன்
மறுவாழ்வுக்கு துணை நிற்கிறாய்!
பெற்ற மகனை
மாற்றான் எனச் செய்கிறாய்!
பரம்பரை பகையைச்
சீரமைத்து விடுகிறாய்!
மனிதன் வாழ்வை
நொடிப் பொழுதில்
புரட்டிப் போடும்
விந்தை பொருளே!
உன் வலிமை புரிந்து
உரிய வழி சொல்லாடும் திறவோனே
உயரிய நிலையை அடைவான்!
வாழ்வின் சுவையை உணர்வான்!
மனிதன் நாவில் பிறக்கும்
பெருவலி மிகு சொல்லே!
உன் பொருளுக்கு இத்தனை
உயிர் சேர்த்தது யாரோ?
மனமொத்த நண்பர்கள்
மனங்கசந்து பிரியச் செய்கிறாய்!
அறிமுகம் அறியாதவனை
ஆருயிர் தோழன் ஆக்குகிறாய்!
தோல்வி அடைந்தவன்
மனம் நோகச் செய்கிறாய்!
மனமுடைந்த ஒருவன்
மறுவாழ்வுக்கு துணை நிற்கிறாய்!
பெற்ற மகனை
மாற்றான் எனச் செய்கிறாய்!
பரம்பரை பகையைச்
சீரமைத்து விடுகிறாய்!
மனிதன் வாழ்வை
நொடிப் பொழுதில்
புரட்டிப் போடும்
விந்தை பொருளே!
உன் வலிமை புரிந்து
உரிய வழி சொல்லாடும் திறவோனே
உயரிய நிலையை அடைவான்!
வாழ்வின் சுவையை உணர்வான்!
இந்திய அரண்மனையின்
தென்கோடி மாளிகை தமிழ்நாடு!
இப்பொன் மண்ணில் விளைந்த
நன்குமுதிர்ந்த நெல்மணிகள்
ஒவ்வொன்றினுள்ளும் அரிசி இருப்பது போல
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
ஓர் இந்தியன் இருக்கிறான்!
அவன் வெற்றியாளன் ஆகையில்
நெல் மீதிருந்த உமி நீங்கி
இந்தியனாய் அறியப்படுகிறான்!
ஆனால் தோல்வி அடைகயில்,
பிரச்சனைகள் சூழ்கையில்
உலகோர் பார்வையிலிருந்து
உமி நீங்க மறுத்துவிடுவது ஏன்?
அது தமிழனின் பிரச்சனையாவது ஏன்?
வளமான செம்மண்ணில்
உழுதுண்டு வாழ்ந்தவன் -இன்று
காவிரி பிரச்சனையால்
காய்ந்து கிடக்கிறான்!
ஆழ்கடலில் அசாதாரணமாய்
முத்துக்குளித்துப் பழகியவன்-இன்று
சுட்டுக்கொல்லப் படுகிறான்!
உமி நீங்கியதாய்த் தோன்றும்
அரிச
இந்திய அரண்மனையின்
தென்கோடி மாளிகை தமிழ்நாடு!
இப்பொன் மண்ணில் விளைந்த
நன்குமுதிர்ந்த நெல்மணிகள்
ஒவ்வொன்றினுள்ளும் அரிசி இருப்பது போல
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
ஓர் இந்தியன் இருக்கிறான்!
அவன் வெற்றியாளன் ஆகையில்
நெல் மீதிருந்த உமி நீங்கி
இந்தியனாய் அறியப்படுகிறான்!
ஆனால் தோல்வி அடைகயில்,
பிரச்சனைகள் சூழ்கையில்
உலகோர் பார்வையிலிருந்து
உமி நீங்க மறுத்துவிடுவது ஏன்?
அது தமிழனின் பிரச்சனையாவது ஏன்?
வளமான செம்மண்ணில்
உழுதுண்டு வாழ்ந்தவன் -இன்று
காவிரி பிரச்சனையால்
காய்ந்து கிடக்கிறான்!
ஆழ்கடலில் அசாதாரணமாய்
முத்துக்குளித்துப் பழகியவன்-இன்று
சுட்டுக்கொல்லப் படுகிறான்!
உமி நீங்கியதாய்த் தோன்றும்
அரிச
புள்ளினம் கூடு திரும்பும் பொழுது
மல்லிகை மொட்டவிழ்க்கும் பொழுது
வண்டுகள் வட்டமிடும் பொழுது
வெட்கம் வந்ததோ
ஆதவனே உனக்கு!
பறவைகள் பிரிந்து செல்லும் பொழுது
மல்லிகை மணமிழக்கும் பொழுது
வண்டுகள் மயக்கம் தீரும் பொழுது
கோபம் வந்ததோ
வெண்ணிலவே உனக்கு!
ஞாயிறும் திங்களும்
இணைய மறுப்பது ஏனோ?
சுட்டெரிக்கும் கனலோ
சுகமளிக்கும் குளிரோ
நிரந்தரமில்லை என்பது
உணர்த்தவோ?
விழுந்தவன் எழுவான்
என்ற எண்ணம்
மனிதன் மனதில்
வேரூண்றவோ?
கடமை தவறாது
காரியம் ஆற்றும்
கண்ணியம்
கற்பிக்கவோ?
எதனால் என்பது
நானறியேன்!
நீங்கள் இருவரும்
சந்திக்கும் பொழுது
இவ்வுலகம்
புதுப்பொலிவு பெற்று
உற்ற சோகம் மறந்து
உவகை வெள்ளத்தில்
மிதப்பது
புள்ளினம் கூடு திரும்பும் பொழுது
மல்லிகை மொட்டவிழ்க்கும் பொழுது
வண்டுகள் வட்டமிடும் பொழுது
வெட்கம் வந்ததோ
ஆதவனே உனக்கு!
பறவைகள் பிரிந்து செல்லும் பொழுது
மல்லிகை மணமிழக்கும் பொழுது
வண்டுகள் மயக்கம் தீரும் பொழுது
கோபம் வந்ததோ
வெண்ணிலவே உனக்கு!
ஞாயிறும் திங்களும்
இணைய மறுப்பது ஏனோ?
சுட்டெரிக்கும் கனலோ
சுகமளிக்கும் குளிரோ
நிரந்தரமில்லை என்பது
உணர்த்தவோ?
விழுந்தவன் எழுவான்
என்ற எண்ணம்
மனிதன் மனதில்
வேரூண்றவோ?
கடமை தவறாது
காரியம் ஆற்றும்
கண்ணியம்
கற்பிக்கவோ?
எதனால் என்பது
நானறியேன்!
நீங்கள் இருவரும்
சந்திக்கும் பொழுது
இவ்வுலகம்
புதுப்பொலிவு பெற்று
உற்ற சோகம் மறந்து
உவகை வெள்ளத்தில்
மிதப்பது
இதய மணிகள் கோர்த்த பெருமதிப்பு வாய்ந்த மாலை! காலத்தின் கட்டாயம் - திசைக்கு ஒன்றாய்ச் சிதறிவிட்டது! செடி விட்டகன்றால் மல்லிகை மணமும் மறைந்திடுமோ? தனித்து நின்றால் மணியின் ஒளியும் மங்கிடுமோ? இரை தேடிப் பறக்கையில் பறவை கூட்டை மறுத்திடுமோ? இடம் வேறு சேர்கையில் மணிகள் மாலையை வெறுத்திடுமோ? அண்டம் பிளந்தாலும் அன்பு உடையாது! பூமி புரண்டாலும் - பள்ளி நட்பு பிரியாது !