pasuvaiuma- கருத்துகள்

நல்ல சமுதாயக் கண்ணோட்டமுள்ள கற்பனை எழில்... இதுபோல் நிறைய எழுதுங்கள்.. அருமை..*4

குசலம் என்றால் நலம் என்றுபொருள் படும்...
இந்த வார்த்தையை பயன் படுத்தும் முறை..

நீண்டநாள் கழித்து ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் நலம் விசாரிப்போம் அல்லவா..

அந்த நடவடிக்கைக்கு குசலம் விசாரித்ததில் என்று பொருள்...
குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வயது முதிர்ந்தவர்கள் பயன் படுத்தும் வார்த்தை..இது..

ஐயா வணக்கம்
தலைப்பை மாற்றி வைத்துள்ளேன் ...இப்போது பார்த்து விட்டு தங்களுடைய மேலான கருத்துக்களைக் கூறவும் ஐயா... நன்றி...
அன்புடன்
பசுவைஉமா

ஜனாதிபதி அப்துல்கலாம் கவிதையை வாசிக்கவும்... நன்றி..
அன்புடன்
பசுவைஉமா..

ஜனாதிபதி அப்துல்கலாம் கவிதையை வாசிக்கவும்... நன்றி..
அன்புடன்
பசுவைஉமா..

ஜனாதிபதி அப்துல்கலாம் கவிதையை வாசிக்கவும்... நன்றி..
அன்புடன்
பசுவைஉமா..

மிக்க நன்றி...சகோதரரே ..

உங்க கண்ணனுக்கு எது நல்லதோ அத மட்டும் பாருங்க mr .பசுவை உமா அவர்களே.this is toooooo much words .வார்த்தையை யோசிச்சு பேசுங்க.



மிக்க நன்றி சகோதரி.... இதைதான் நான் கடைபிடித்துக்கொண்டு வருகிறேன்... அனைவருக்கும் சொல்லிக்கொண்டும் வருகிறேன்....


கொஞ்சம் நுட்பமாக ஆராய்ந்து பாருங்கள்..., நண்பர் திரு. நிலசூரியன் அவர்கள் கருத்தை சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள்....

நாம் அனைவரும் முகம் பார்க்கும் கண்ணாடி போல...

அவரவர் முகம் எப்படி உள்ளதோ அதற்குத் தகுந்த பிரதிபலிப்புதான் இருக்கும்....

உங்கள் கருத்திற்கு
நன்றி சகோதரி...
அன்புடன்
பசுவைஉமா

கணநேரத்தில் நட்பான-நம்
குணசேகரன் ஐயாவிற்கு
மனம் முழுதும் மரியாதை
மனம் வீசும் என்றென்றும்...
பணம் பல இருந்தாலும்
பதவி பல இருந்தாலும்
குணம் முழுவதும் கவிதைகளை
குவியல் குவியலாய் வைத்துள்ளார்..
இத்தனை குணங்கள்
இவரிடம் இருப்பதனால்-நான்
இரவல் கேட்கிறேன்
எனக்கு ஒரு நற்குணத்தை...

தாருங்கள் ஐயா....
தலை வணங்கி கேட்கின்றேன்...

நன்றி
அன்புடன்
பசுவைஉமா

இந்தக்கவிதை சுமார் பதினைத்து ஆண்டுகளுக்கு முன் என் மனதை பாதித்த சம்பவத்தின் போது எங்கள் கிராமத்தில் இரவு சுமார் ஒரு மணியளவில் தெரு விளக்கிற்கு அடியில் அமர்ந்து வருத்தத்துடன் எழுதியது ஐயா ....
நன்றி... என் வணக்கங்களை உங்கள் பொற் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்...

அன்புடன்
பசுவைஉமா

எனதருமை எழுத்து சூறாவளி அவர்களே ! புனைப்பெயரால் உங்களுக்கு ஒரு உற்சாகம் வருகிறதென்றால் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் ... குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும்...அருமையான படைப்புக்களை உருவாக்குங்கள்...வாழ்த்துக்கள்...
அன்புடன்
பசுவைஉமா...

சகோதரர் ஈஸ்வர் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
சகோதரா negative, positive என்று இரண்டு விஷயம் தாங்கள் அறிந்ததே...


எப்போது ஒருவன் negative,-வாக பேசுகிறானோ அப்போது அவனை சுற்றி negative, விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கும்...


எப்போது ஒருவன் positive,-வாக பேசுகிறானோ அப்போது அவனை சுற்றி positive, விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கும்..


உதாரணமாக ஒரு சாலையில் நீங்கள் பயணம் செல்லும்போது உணவு அருந்த வேண்டும் என்றால் மிகவும் சுத்தமான சுகாதாரமான தண்ணீர் வசதி உள்ள தூய்மையான இடத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பீர்கள் அல்லவா...இது positive ...


நீங்கள் ஒரு கடைவீதி வழியாக நடந்து செல்லும் போது உங்களுக்கு எச்சில் துப்ப வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் உடனே நமது கண்கள் குப்பைகள் நிறைந்த, அழுக்கான, மறைவான பகுதியை தேடும்தானே ..... இது negative ..


இதில் ஒன்றை கவனித்துப் பார்த்தீர்களா சகோதரா...


நம் மனது எவ்வாறு செயல்படுகிறது என்று?

positive -வை தேடி positive போவதுபோல் negative -வை தேடி negative போகும்...



அது போல் நீங்கள் positive வாக இருந்தால் positive விஷயங்கள் அனைத்தும் உங்களை தேடிவரும்...


நீங்கள் negative வாக இருந்தால் negative விஷயங்கள் அனைத்தும் உங்களை தேடிவரும்..



நமக்கு எது வேண்டும் என்று நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் சகோதரா.


உலகில் உள்ள அனைவருமே சந்தோசத்தைத்தான் விரும்புகிறார்கள்... அதில் நீங்களும் நானும் விதிவிலக்கா சகோதரரே...?...

think positive ...


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

ஆசை படாமல் இருக்க ஆசை படு -என்பதுபோல
கஷ்டபடாமல் இருக்க கஷ்டப்பட்டு -என்பதுபோல
கோபபடாமல் இருக்க சில சமயம் நாம் கோபபட்டுதான் ஆகவேண்டும் சகோதரா...
தங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மனம் மகிழ்கிறேன்...

நன்றி ...
அன்புடன் பசுவை உமா ....


என் கவிதைக்கு தங்களுடைய பாராட்டு.. மிக்க நன்றி ஐயா....

என் கவிதைக்கு தங்களுடைய பாராட்டு.. மிக்க நன்றி ஐயா....

சகோதரர் ஈஸ்வர் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...




நீங்கள் நாகர்கோவில் என்பதால் ஐயாவழி பற்றி தெரிந்திருக்கக் கூடும்...அவைகளுடைய நூலான அகிலத்திரட்டு வாங்கிப் படிதுப்பாருங்கள்...
புராணங்கள் பற்றிப் பேசும் நண்பர் நிலாசூரியன் அவர்களுக்கு ஆரியப்பட்டர் எழுதிய வானவியல் சாஸ்திரத்தை படித்து அந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல சொல்லுங்கள்...எப்போதெல்லாம் இயற்க்கை பேரழிவுகள் நிகழும் என்று மிகவும் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்...
இஹ்து போன்று உள்ள உண்மைகளை வெளிப்டுதச் சொல்லுங்கள்...

"கையில் குழந்தைவைத்து பிச்சை எடுக்கும் சகோதரிகளை கனுவிட்டே தான் செல்கிரீகள் ஒழிய அவர்கள் நிலையை மாற்றவேண்டும் என்று நீர் ஒருநாளாவது மனதில் நினைத்திருந்தால் அதில் ஒரு சகோதரியின் வாழ்கை முறையாவது மாறி இருக்குமே ஏன் முயலவில்லை."- என்று என்னிடம் கேட்டு இருந்தீர்கள்...

எங்கள் இயக்கத்தின் மூலம் அவ்வாறு உள்ள சகோதரியின் குந்தைகளை எடுத்து நாங்களே அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து அவர்களுடைய கல்விசெலவுகளையும் கொடுத்து கவனித்து வருகின்றோம்...அதற்க்கு "அன்பு இல்லம்"- என்று பெயர் வைத்துள்ளோம்..
இதுவரை மொத்தம் 120 குழந்தைகளுக்கு மேல் கவனித்து வருகின்றோம்..

இது போல் நான்கு இல்லங்கள் நடத்துகிறோம்...

இது மட்டுமில்லாமல் அனாதை குழந்தைகள்( இந்த வார்த்தையை பயன்படுதுவதர்க்கு மன்னிக்கவும்) ஆதரவு இல்லாதோர்கள் என பட்டியல் நீளும்... இதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை... நீஎங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறுகிறேன்....

நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் .. மதிப்பெண் 3

நல்ல கற்பனை..
உடைத்தால் டியூப் லைட்டை
உண்டாகும் வெடிச்சத்தம் - அதனை
உபயோகப் படுத்துவோம் - அது
உதவட்டும் இன்றைக்காவது பட்டாசுக்கு

அருமை...
அன்புடன்
பசுவைஉமா.


pasuvaiuma கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே