sekarsaran- கருத்துகள்

விரல்களைத் தேடி (பொங்கல் கவிதைப் போட்டி)

உயிர்த்துளியின் கடைசிச் சொட்டோடு...
என் இனத்தோடு பேசுகிறேன் நான்.
காடாகிவிட்ட நிலப் பரப்பில்...
உலவும் மிருகங்களுக்குக் கேட்காத குரலில்.

கோடை முடிந்து மழை துவங்கும் என்றோ...
வசந்த ருதுவின் வாசம் வீசும் என்றோ...
என்னால் உங்களிடம் பொய் சொல்ல முடியாது.
எங்கும் பாலைக்குப் பருவங்கள் இல்லை.

புரண்டாடிய பெரு நிலத்தில் உயிர்த்திருந்தது
உறவுகள்...தேவாரம் திருப்பண்ணாய் இசைத்தபடி.
நீந்திக் களித்த நீர்மையை...படித்த சாலைகளை
துடைத்து எறிந்திருந்தது காலம்.

இப்போது வானம் இல்லை...
ஆகாயத்தின் அழும் கண்களாய் என்சொற்கள்.
தூசியாய்க் கலைந்த வாழ்வின் சித்திரங்கள்..
கனவுகளோடு காத்திருக்கிறது உங்கள் நிலங்களில்.

களவாடப்பட்ட பொழுதாய் என் கனாக் காலங்கள்.
என்றாலும்...கலையாது என் கனவுகள்.
நீளும் விரல்கள் நீந்துகின்றன...திசையற்று...
நம்பும் காலத்தோடு..உங்களின் விரல்களைத்தேடி

ரொம்பவும் நன்றி! அகன் சார்.

மிக நன்று ....
அருமை ..........
படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் .......

தமிழை நேசிக்கும்
உங்களுக்கு
என் மனமார்த்த
நன்றிகளும் .....
வணக்கங்களும் .....................

ரொம்பவும் நன்றி! கவி கண்மணி...

முயற்சி முடிவுபெறாது
முன்னுக்கு செல்லும் வரை
பயிற்சியோடு முயல்வோம்
இலக்கை நோக்கி !....

இனிய நாளாக
பிறந்தநாள் மட்டுமல்லாமல்
இனி வரும் நாட்களும் அமைய வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

உண்மையான வரிகள் ..
சூப்பர் ........

நன்றி சார் !...
என்றும் எதார்த்த படைப்புடன் சரண்யா ....


sekarsaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே