எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவனே எங்கிருந்தாய் நீ....... பிறைநிலா வளர்ந்து முழுநிலவானபோதும் முகம்...

என்னவனே எங்கிருந்தாய்
நீ.......
பிறைநிலா வளர்ந்து
முழுநிலவானபோதும்
முகம் காட்டா நீ எங்கிருந்தாய்......?

எனக்கு விண்ணப்பமும்
போடவில்லை....
விருப்பமும் கேட்கவில்லை
நீ.....

பிறகெப்படி என்னில்
நுழைந்து என்னவனானாய்..?

வரவேற்பறையில்
தேநீரோடு நான் நெருங்க
பரபரப்போடு நீயிருக்க
நமக்கான ஆகம விதிகள்
அன்றே ஆரம்பித்து விட்டன......!!

நாளை உனக்கு
பிறந்த நாளாமே..?
எனக்காக நீ
பிறந்த நாளா..?

விண்மீன்கள் தேரிழுத்து
உன்னோடு ஊர்வலம்போகும்
நாளொன்றிற்காய் காத்துநிற்கிறேன்
கடல்கடந்து வந்துவிடு.......!

இரு சூரியன்கள்
நாம் சந்தித்துக் கொண்டால்
இரு வேறு பிரபஞ்சங்கள்
சங்கமிக்கும்......!!

என்னோடு ஒரு நூறு ஆண்டு
என் காதலோடு ஆண்டு ஐந்நூறு
நீ வாழ வேண்டும்
நான் வாழ்த்த வேண்டும்.....!!

காதலால் வாழ்த்துகிறேன்.....!!

-வித்யா







நாள் : 5-Nov-14, 10:49 pm

மேலே