எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------------- குற்றம். நடந்தது என்ன ? ----------------- சற்று...

------------------- குற்றம். நடந்தது என்ன ? -----------------

சற்று நேரத்திற்கு முன்
அந்த ஊரின் சாலையின்
ஓடிக் கொண்டிருந்த
ஆயிரக்கணக்கான வாகனங்களில்....
ஒன்றின் ஓட்டுனர் இன்னொன்றின் ஓட்டுனரை
அந்த இன்னொன்றின் ஓட்டுனரின் பிழைக்கு
அவர் கடந்த பிறகு
____ மகனே என்று ஏசினார் .

அங்கிருந்த பாதசாரி ஒருவனுக்கு
வந்த சந்தேகங்கள் யாதெனில்
1.அவரின் பிழைக்கு அவர் அம்மா
எங்ஙனம் பொறுப்பு ?
மழலையில் நடைவண்டியில்
நடை கற்பித்ததை தவிர .
அது இவருக்கும் இவர் அம்மா
கற்பித்ததுதானே.

2. இவர் தன்னை அனைத்துக் கொண்டிருந்த
இவரின் பிள்ளை
அவ்வாக்கியத்தின் பொருளை
கேட்டபோது என்ன சொல்லி இருப்பார் ?

3. அவரின் தாய் அப்படி என்றால்
இவரின் தாய் இப்படி என்று
ஓட்டுனர் உரிமத்தில் உள்ளதா ?



நாள் : 9-Feb-15, 9:12 am

மேலே