எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய ரமழானே...... ரமழானே... ரமழானே... ரஹ்மத்தின் ரமழானே ......

இனிய ரமழானே......

ரமழானே... ரமழானே...
ரஹ்மத்தின் ரமழானே ...
நன்மைகளின் மாதம் நீயே...
நல்லோர்களின் தேட்டம் நீயே...
புனிதமான நோன்பு நோற்றோம்...
புதுமையான உணர்வு பெற்றோம்...
நோய்கள் பல நீ களைந்தாய்...
நோன்பின் மாண்பை புரியவைத்தாய்...
பசித்தாலும் புசிக்கவில்லை...
தாகம் எடுத்தாலும் குடிக்கவில்லை...
சுட்டெரிக்கும் சூரியனும்...
சுள்ளென்று தாக்கினாலும்...
உயிரைக்கூட விட்டுவிடுவோம்...
உயிர் நோன்பை மட்டும் விடமாட்டோம்...
மறுமைநாளில் நீயே சாட்சி...
மாந்தர்களுக்கு நீயே மீட்சி...
இன்றோடு உன்னை பிரிந்தோம்...
இனி என்றுன்னை சந்திப்போம்...
வருடமெல்லாம் நீ வருவாய்...
வள்ளலைப்போல் நன்மை தருவாய்...
ரமழானை பிரிகின்றோம்...
ரட்சகனே அழுகின்றோம்...
பெருநாளின் பெருங்கொடையாய்...
பாவங்கள் மன்னிப்பாய்...
பாவிகளின் பிழை பொறுப்பாய்...
இம்மாதம் இருந்ததுபோல்...
இறுதிவரை உனை தொழவே...
எல்லோர்க்கும் அருள்புரிவாய்..
அருள்மழை நீ பொழிவாய்...

நாள் : 19-Jul-15, 11:23 am

மேலே