எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்... கரும்புகள் அடுக்கி வைத்து...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

கரும்புகள் அடுக்கி வைத்து - மண் கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன் வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோ பொங்கல் என்று - நாம் போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க நட்பொடுவுள் அன்பும் பொங்க
தேடியசெல் வங்கள் பொங்க தெய்வத்தின் அருளும் பொங்க
கூடியவித் திருநாள் அதனில் கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

நாள் : 17-Jan-16, 10:56 am

மேலே