எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூரியனே!!! சூரியனே!!! ஒரு எழுத்தில் இதிகாசங்களையும் ஒரு சொல்லுள்...

  சூரியனே!!!  சூரியனே!!! 
  
ஒரு எழுத்தில் இதிகாசங்களையும்
ஒரு சொல்லுள் சகாப்தங்களையும்
ஒரு வரியில் வரலாறுகளையும்
ஒரு பத்தியில் பிரபஞ்சங்களையும்
சுருங்கச் சொல்லிய சூரியனே!!!
உலக நியதியை உணர்த்தவே
மாலையில்  மறைந்தாயா???
மறுநாளை எண்ணி காத்திருக்கிறோம் 
மறவாமல் வந்துவிடு...

கலைஞருக்காக ரசிகன் விக்னேஸ்...  

பதிவு : விக்னேஸ்
நாள் : 10-Aug-18, 10:38 pm

மேலே