கண்ணனை இரண்டு நிமிடங்கள் காணவில்லை என்றாலே கலங்கி விடுவாள்...
கண்ணனை இரண்டு நிமிடங்கள்
காணவில்லை என்றாலே
கலங்கி விடுவாள் ராதா கண்ணனை
தந்தையிடமிருந்து ஒளித்துவைக்க இடம் தேடியவாறு அங்குமிங்குமாய்
கருவிழிகள் அலைபாய கண்ணன் ராதாவைத் தேடிவர அங்கு பதட்டமாய்
ஏதோ அவள் தேடுவதை காண்கிறான்
ராதா ஏனிந்த பதட்டம்
உனக்கு உன் கண்ணன் இருக்கையில்? என்ன தேடுகிறாய் ராதா கூறு உன் கண்ணன் உதவுகிறேன்
என கரம் பற்ற "கண்ணா! என் தந்தை
வரனுடன் வருகிறார் உன்னை கண்டால்
சினமடைவாரே! எங்கு உன்னை
மறைக்கவென்று தக்க இடம் தேடுகிறேன்"
எனக் கூற கண்ணன் பதிலுரைக்காது
புன்னகைக்க ராதா இயலாமையுடன்
"என்னால் உன்னை இழக்கமுடியாது கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா"
அனைத்துமறிந்தவன் நீ ! உனக்குத் தெரியாதா நீ தக்கவிடமறிந்து
மறைந்துகொள் எனக் கூற
கண்ணன் தனக்கேயுரிய குறும்புடன்
ராதாவிடம் உன் இதயத்தில் ஏற்கனவே குடியேறிவிட்ட
என்னை எங்கு ஒளிந்து கொள்ளச்
சொல்கிறாய் ராதா? உன் மனச்சிறையில்
காதல் கைதியாய் இருக்கிற என்னை வெளியேற்றிவிடாதே!
இதைவிட தக்க
பாதுகாப்பிடம் வெளியில் இல்லை
என்னவள் ராதா ! இருந்தாலும்
என் ராதாவை விட்டு வெளியேறும்
உத்தேசமில்லை எனக் குறும்பு கலந்த
காதலுடன் சொல்ல ராதா கண்ணனை
கரம் பற்றி காதலுடன் தோள்சாய
காதல் கீதம் மெல்லிசையாய்
கண்ணனின் புல்லாங்குழல் நாதத்துடன் அரங்கேறியது