எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலைநேரம், சாலையோரம், என் காதுகேட்டது ,ஒரு பரிதாபக் குரல்....

காலைநேரம்,

சாலையோரம்,

என் காதுகேட்டது ,ஒரு

பரிதாபக் குரல்.

இது என்ன !

எமனின் பாசக்கயிறு

என் கழுத்திலா?

வேண்டாம்! வேண்டாம்!

அவனைத் தடுத்து நிறுத்துங்களே!

நில்!

நீ , வராதேடா.

வா,வா, 

மற்றொரு காது கேட்டது.

என் கண்கள் வியந்தன!

திரும்பிய கழுத்தின் பக்கம்

நீ , வந்தாதாண்டா  எங்களுக்கு உணவு தருவாய்.

தயவு செய்து சீக்கரம் வா.

அந்த பனிப் பயலுக்கு என் வேலை ,

நீ, வாடா!

ஒருவனுக்காக நீ நின்றால், இந்த உலகம் என்னவாகும்,

வாடா ! சீக்கரம்.  

இரவு முழுவதும் எங்கள் மீது விளையாடினான்,

எங்கள் வலி தெரியாமல்! 

அப்போவும் அவன்நலம் ,

இப்போவும் அவன்நலம்,

சுயநலம் பிடித்தவன். 

என் உடலும்,உயிரும் பிரிகிறதே!

தங்கக் கதிர் போல

தரணியை அவன் தொட்டுவிட்டான். 

சுயநலக்காரன் மடிந்தான், 

பிறர் நலனுக்காக ! 

தன் எரித்துக் கொள்ளும், 

தியாகியே! உன்னை தாவரங்களாகிய நாங்கள் 

வரவேற்கிறோம்!வணங்குகிறோம்! பகலவனே! உன்னைப் போற்றிகிறோம்.

திரும்பி பார்த்தேன். 

என் கண்கள் சட்டென்று மூடிக்கொண்டன.

என் மனம் சொன்னது! 

நீ! என்றும் எங்களுக்கு வேண்டும், கதிரவா!சூரியா!

சூரியா போற்றி

சுந்தரா போற்றி

தலைவா போற்றி

தரணிகாக்கும் இறைவா போற்றி

எங்கள் தை மாத நாயகனே போற்றி

ஏழு குதிரை தேர் உடையவனே போற்றி

சனியின் தந்தையே போற்றி

நடுநிலைமை உடையவனே போற்றி

உன்னை வணங்குகிறேன்,

வாழ்த்தி அருளுங்கள்.

                       அகிலா.தி












பதிவு : Ahila
நாள் : 25-Feb-20, 9:59 am

மேலே