எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா, அம்மாவை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக...

அப்பா, அம்மாவை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை கண்டுகொள்வது இல்லை.பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.


இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி. அவரை யாரும் கண்டுகொள்ளவில்ல. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை.ஒரு பழமொழி உன்டு. 

'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்' என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால், அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.


செவென் சாமுராய். அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.ஒரு விவசாய கிராமம். அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உனவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்புவாழ்க்கைக்கு மீண்டும் சென்று விடுகிறார்கள்.தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்.


"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் போவது" என ஒரு பழமொழி உண்டு.இன்றைக்கு டாக்டர்களை தெய்வம் என்பவர்கள் நாளை கொரொனா முடிந்தபின் அவர்களை கண்டுகொள்ளகூட மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு சினிமா, டிக்டாக் என போய்விடுவார்கள். இரன்டுமாதம் கழித்து கொரொனா வந்ததும், போனதும் கூட யாருக்கும் நினைவில் இருக்காது. சாமுராய் நிலைமை தான் மருத்துவருக்கும்.இதுதான் உலகம்.இதன் இயல்பை அறிந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் இருக்காது.

( இதுவரை உள்ளது நான் படித்தது)
*****************************************


இனி வருவது ....
அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டிய ஒன்று . அனுபவம் எனும் புத்தகத்தின் ஒரு பக்கம்.
நான் இதை அனுபவப்பூர்வமாக தெரிந்துக் கொண்டவன்.
காலமும் சூழலும் மாறினால் நமது நிலையும் மாறிடும். நான் அதிகம் படித்தவன் அல்ல. ஆனால் பல அனுபவங்கள் மூலமாக சிலவற்றைக் கற்றவன்.


அடுத்தவர் வாழ்க்கை மூலம் அறிந்து கொண்டேன்.
இன்றைய நிலை நாளைக்கு இல்லை.
இதனை புரிந்து கொண்டவர் புன்னகை பூத்திடுவர். 
அதனை உணராதவர் குழப்பத்தில் சிக்கித் தவிப்பர்.



பழனி குமார்
18.04.2020

நாள் : 18-Apr-20, 3:32 pm

மேலே