என் நட்பு நட்பினை நாடி நதிப்போல் நாடெங்கும் நடமாடும்...
என் நட்பு
நட்பினை நாடி நதிப்போல்
நாடெங்கும் நடமாடும்
நண்பன் நான்..
நடந்தேன் நடந்தேன் நாட்களெல்லாம்
ஏனோ நடக்கவில்லை
நான் நினைத்தது....
நினைத்தேன் நட்பு நல்குமென்று
நினைவாக நிற்கின்றது
நெஞ்சத்தில் நிரைவேராமல்...
நட்பினை நாடும் நண்பன் நான்
நகமென்று நினைத்து நீக்கிய
நண்பர்கள் பல...
நட்பை நாடுவது நப்பாசையாம்
நண்பர் நற்கூற்று நல்கினார்
அதுவோ,
நட்பினை நாடாதே..
நட்பினை கேட்டறிந்து வாங்காதே....
தானாக நட்பு வரவேன்டுமென்று....
நற்கூற்றானது மனதை
நாசமாக்கியது அன்று
நாடவில்லை நாடமாட்டேன்
அந்நட்பினை அன்றிலிருந்து....
தனிமையில் ...பிறகு
ஒரு நாள் பாலைவனத்தின் கழுகுக்கு
கானல் நீர் கிடைத்தது
கழுகுக்கு தெரியாது ஓராண்டிற்கென்று..
தெரிந்தால் பழகியிருக்காது....
நட்பெனும் தாகத்தை தனிக்க
நண்பனெனும் குளம் கிடைத்தது..
தூய்மையான நட்பு .....
கண்களில் கண்ணீர் கசிகிறது
கண்களுக்கு தெரியாமல்
ஏனோ,
கண் விழித்து உலகை பார்த்த
தினம் உனக்கு,
வாழ்த்து கூற முடியவில்லை என்பதாலா...........
அல்ல,
உன் நட்பானது
என்னிடம் இல்லை என்பதாலா...
தெரியவில்லை எனக்கு,
கண்ணீரில் குளித்தேன் இன்று....